ஞாயிறு, 2 ஜூன், 2024

உண்மையை ஆணித்தரமாகப் பேசும் நூல் - கல்பனா சாகர்


தோழர் திரு மகாராசன் எழுதியுள்ள 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து ' நூலை, அளவில் சிறியது தானே என்று சாதாரணமாக யாரும் கடந்து விட முடியாது. 

ஒவ்வொரு பக்கமும் கனத்த பொருள் பொதிந்தவை. இன்றைய பாடப்பொருண்மை, அதை மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் விதம், ஆசிரியர்களின் கையறு நிலை, மாணவர்களின் திணறல்,மெல்லக் கற்கும் மாணவர்களின் திணறல், சமூக உதிரிகளாக மாறும் அவலம் என்று உண்மைக்கு மிக அருகில், இல்லையில்லை, உண்மையையே ஆணித்தரமாக அக்கறையோடு ஆசிரியர் கூறும்போது நம் மனதிலும் உணர்ச்சிப் பிழம்புகள் ஒட்டிக் கொள்கின்றன. 

இந்த நூல் வழியாக அனைத்துத் தரப்பினரையும் சிந்திக்க வைத்த சமூகச் சிந்தனையாளர் ஆசிரியர் திரு மகாராசன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் 

தோழமையுடன் 
கல்பனா சாகர்,
முதுகலை ஆசிரியர்,
ஆண்டிபட்டி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக