செவ்வாய், 30 மார்ச், 2021

பெருந்திணை


கற்கள் உரசக் கசியும் 
சிறு தீப்பொறி 
பொசுக்கென அணைந்து போகும் பஞ்சுப்பொதி காணாத தவிப்பில். 

கண்கள் மசியக் கசிந்த 
பெருங்காமத்தீ 
பற்றிப் படர்ந்துகொண்டே இருக்கிறது 
நல்லுடல் நினையும் திளைப்பில். 

கண்டும் கேட்டும் 
உண்டும் உயிர்த்தும் 
உற்று அறிந்தும் பொங்கிவழியும் காமத்தின் கொள்கலம் 
பெருந்தீ எரியக் 
காத்துக் கிடக்கிறது அடுப்பங்கரையில். 

கொழுமுனை பதியாத கரடுகளும் உழவுச் சால் ஏங்கிக் கிடக்கின்றன காய்ந்துபோன ஒட்டுப் புற்களோடு. 

ஏர் மகாராசன் 
29.03.2021