திங்கள், 26 செப்டம்பர், 2022

திலீபனின் பசி : மகாராசன்


தமிழ் இனத்தின் 
விடுதலைப் பசிக்கு,
தன்னுயிரை
மெல்ல மெல்லத் 
தின்னக்கொடுத்து,
ஈழக் கனவை
நிலத்தில் விதைத்து,
சொட்டு நீரும் அருந்தாமல்
உண்ணா நோன்பிருந்து
உயிர் நீத்து,
அறத்தையும் மறத்தையும்
காண்பித்துப் போன
ஈகத்தின் பெருஞ்சுடர்
திலீபன்.

திலீபனின்
தாயகப் பசிதான்
இன்னும் அடங்கவில்லை.

ஏர் மகாராசன்
26.09.2022


2 கருத்துகள்: