வெள்ளி, 24 ஜனவரி, 2025

Poetic Words of Land: N.Vijayabanu.

The poems written in the text ‘Words Sprouted in the Land’ author Maharasan, is based on the society and culture of the Tamil farmers and their connection with their farmland.

In Tamil culture, agricultural land is not mere a source of income to the farmers, but it is deeply connected with their life and blood. 

The bond between the farmers and their lands are deeply depicted in this text. The language used in his poems not only gives the beauty of Tamil language, but it reveals the connection between the Tamil peoples culture and life is based on the land and topography of the land they live. 

The meaning of the poems differ from people to people according to their perception.In his poems we can see the poet’s indepth brilliance with his native land and his people. The struggles faced by the farmers after losing their farmlands are depicted in a sorrowful voice.

This English translation of this book ‘Nilathil Mulaitha Sorkal’ will reach the global readers and will reveal the Tamil culture to the entire world.

Translator Padma Amarnaath’s linguistic knowledge can be seen throughout the text. Some words are related only to our native Tamil culture, which cannot be related by other readers, but she had taken efforts to put suitable words for our Tamil native scripts. 

The meaning of the native words given below the poems is a good feature to the global readers and this work by the translator is in the appreciable manner. 

My heartfull wishes for his future achievements in literary world.

Book Review by:
Mrs N.VIJAYABANU
Teacher,
Erode.
*

WORDS SPROUTED IN THE LAND,
Author: MAHARASAN,
Translated from Tamil by:
PADMA AMARNAATH,
First Edition, January 2025, Pages 120,
Rs. 100/- 
Published by:
YAAPPU VELIYEEDU, 
Chennai - 600076, 
Cell: 9080514506.


செவ்வாய், 21 ஜனவரி, 2025

நமது குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகப் போராடுவார்கள் - லெனின்

:தொழிலாளி வர்க்கமும் நவீன மால்த்தூசிய வாதமும். 

பிரொகோவில் நடைபெற்ற டாக்டர்கள் காங்கிரசில் கருச் சிதைவுகள் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டு, ஒரு நீண்ட விவாதமும் நடைபெற்றது. லிச்குஸ், தாம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்கால நாகரிக நாடுகள் எனப்படுவனவற்றில் உள்ள கருவை அழிக்கின்ற மிக மிகப் பரவலான நடைமுறை சம்பந்தமான புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டினார்.

நியூயார்க்கில் ஓராண்டில் 80,000 கருச்சிதைவுகள் நடத்தப் பெற்றன. பிரான்சில் ஒவ்வொரு மாதமும் 36,000 வரை நடைபெறுகின்றன. செயின்ட் பிட்டர்ஸ் பர்க்கில் கருச் சிதைவுகளின் சதவீதம் ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. பிரொகோவ் டாக்டர்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்மானத்தில், செயற்கையாகக் கருச் சிதைவு செய்து கொண்டதற்காக ஓர் அன்னையின் மீது எத்தகைய கிரிமினல் வழக்கும் தொடுக்கக் கூடாதென்றும், ‘ஆதாய நோக்கங்களுக்காக’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அது சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீதுதான் வழக்குத் தொடர வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

விவாதத்தின் போது, கருச் சிதைப்புகளை தண்டனைக்குரிய குற்றமாக்கக் கூடாதென்று பெரும்பான்மையோர் ஒத்துக் கொண்டனர். நவீன மால்த்தூசிய வாதம் (கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது) எனப்படும் பிரச்சினை இயற்கையாக விவாதிக்கப்பட்டது; பிரச்சினையின் சமூகக்கூறு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

உதாரணமாக, திரு. விக்தோர்சிக் பேசுகையில், ருஸ்கோயிஸ்லோவோ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி, “கருத்தடைச் சாதனங்களை உபயோகிக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டும்” என்று கூறினார். திரு. அஷ்ட்ராகான், கரவொலியின் பேரொலிக்கிடையில் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:

“குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படித் தாய்மார்களை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் கல்விநிலையங்களில் அவர்களை முடமாக்க முடியும். அவர்களுக்காகப் பங்கு பிரித்துக் கொடுக்க முடியும்; அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்குப் போகும்படி செய்ய முடியும்.”

இந்த செய்தி உண்மையெனில், திரு. அஷ்ட்ரகானுடைய இந்த வியப்புரைக்கு பேரொலி தரும் கரகோஷத்துடன் கூடிய வரவேற்பு கிடைத்ததென்பது உண்மையெனில், அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூட்டத்தினரில் பண்பாடற்ற மனப்பாங்கு உடைய பூர்ஷுவா, நடுத்தர குட்டி- பூர்ஷுவாவினர் இருந்தனர். அவர்களிடமிருந்து மிகவும் இழிந்த மிதவாதத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

எனினும், தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, மேலே குறிப்பிட்ட திரு. அஷ்ட்ரகானின் சொற்றொடரைவிட “சமூக நவீனபாணி மால்த்தஸ்-வாதத்தின்” முற்ற முழு பிற்போக்குத் தன்மை, அவலட்சணம் இவை குறித்த அதிகப் பொருத்தமான வார்த்தையைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.

“குழந்தைகளைப் பெறுங்கள்; ஏனெனில் அப்பொழுதுதான் அவற்றை முடமாக்க முடியும்...” அதற்காக மட்டுமா? நமது தலைமுறையை முடமாக்கி, நாசமடையச் செய்யும் இன்றைய வாழ்க்கை நிலைமைகளை நாம் எதிர்த்துப் போராடி வருவதை விடவும் மேம்பட்ட முறையிலும் அதிக உணர்வுபூர்வமாகவும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் அவர்கள் போராடுவதற்காக, என்றும் ஏன் இருக்கக்கூடாது?

இதுதான். பொதுவாக விவசாயி, கைவினைஞர், அறிவாளி, குட்டி பூர்ஷுவா இவர்களின் மனோநிலையைத் தொழிலாளியின் மனோ நிலையிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் தீவிர வித்தியாசமாகும். தன் அழிவை நோக்கி விரைவதாகவும் வாழ்க்கை முன்னிலும் கஷ்டமானதாக வருகிறது என்றும், உயிர் வாழ்வதற்கான போராட்டம் முன்னெப்போதையும் விடக் கொடியதாகி வருகிறது என்றும் தனது நிலைமையும், தன் குடும்பத்தின் நிலைமையும் மேலும் மேலும் மோசமாகி வருகிறதென்றும் குட்டி பூர்ஷுவா காண்கிறான், உணர்கிறான். இதுமறுக்க முடியாத உண்மையாகும். குட்டி பூர்ஷுவா இதை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கிறான்?

ஆனால் அவன் எவ்வாறு இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறான்.

நம்பிக்கைக்கு இடமின்றி அழிந்து வருகிற, தனது வருங்காலத்தைப் பற்றி பீதியடைகின்ற, மனச் சோர்வுக்கு கோழையாக உள்ள ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியென்ற முறையில் அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான். எதுவும் செய்ய முடியாது... நமது வேதனைகளையும், கடின உழைப்பையும், நம் வறுமையையும், நம் அவமானத்தையும் அனுபவிப்பதற்கு நமக்குக் குழந்தைகள் குறைவாயிருந்திருந்தால் - இவ்வாறு தான் குட்டி பூர்ஷுவா புலம்புகிறான்.

வர்க்க உணர்வுள்ள தொழிலாளி இத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்தகைய புலம்பல்கள் எவ்வளவு உண்மையானதாகவும், இதய பூர்வமானதாகவும் இருந்த போதிலும், அவற்றால் தனது உணர்வு மழுங்கடிக்கப்படுவதற்கு அவன் அனுமதிக்க மாட்டான். ஆம், தொழிலாளர்களும், பெருமளவிலான சிறு உடைமையாளர்களுமாகிய நாம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வருகிறோம். நமது தந்தையர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் நமது தலைமுறைக்கு வாழ்க்கை அதிகக் கடினமாயிருக்கிறது. 

ஆனால் ஓர் அம்சத்தில் நாம் நமது தந்தையர்களை விடவும் அதிர்ஷ்டசாலிகளாயிருக்கிறோம். போராடுவதற்கு நாம் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளோம், வேகமாகக் கற்றுக்கொண்டு வருகிறோம். நமது தந்தையர்களில் சிறந்தவர்கள் போராடியது போன்று தனி நபர்களாகப் போராடுவதற்கல்ல, பூர்ஷுவா பேச்சாளர்களின் கோஷங்களுக்காக அல்ல. அவை உணர்வில் நமக்கு அன்னியமானவை - மாறாக, நமது கோஷங்களுக்காக, நமது குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகப் போராடுவார்கள்; அவர்கள் வெற்றிவாகை சூடுவர். 

தொழிலாளி வர்க்கம் அழிந்து வரவில்லை, அது வளர்ந்து வருகிறது. மேலும் வலுவடைந்து வருகிறது; துணிவு பெற்று வருகிறது; தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது; தனக்குத்தானே போதனை பெற்று வருகிறது; போராட்டத்தில் புடமிடப்பட்டு வருகிறது. பண்ணயடிமைத்தனம், முதலாளித்துவம், சிறு உற்பத்தி இவை சம்பந்தமாக நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறோம்; ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கம், அதனுடைய குறிக்கோள்கள் இவற்றைப் பொறுத்தமட்டிலும் நாம் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் ஒரு புதிய மாளிகைக்காக ஏற்கனவே அஸ்திவாரமிட்டு வருகிறோம். நமது குழந்தைகள் அதைக் கட்டி முடிப்பார்கள். நாம் நிபந்தனையின்றி நவீன மால்த்தூசிய வாதத்திற்குப் பகைவர்களாயிருப்பதற்கு அதுதான் காரணம், அது ஒன்றே தான் காரணம். 

இந்த வாதம் உணர்ச்சியற்ற, தற்பெருமை கொள்ளும் குட்டி பூர்ஷுவா தம்பதிகளுக்குத்தான் பொருத்தமானது. 

“நாம் எப்படியோ சமாளித்துக் கொள்வதற்குக்கு கடவுள் அருள் புரிவாராக! நமக்குக் குழந்தைகள் இல்லாவிட்டால் மிகவும் நல்லதே” என்று பீதி நிறைந்த குரலில் அவர்கள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். 

இது, கருச் சிதைவுக்கு எதிரான சகல சட்டங்களும் நிபந்தனையின்றி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருவதினின்றோ, அல்லது கருத்தடை நடவடிக்கைகள் குறித்த மருத்துவ வெளியீடுகளை வினியோகம் செய்வது முதலியவற்றுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யவேண்டும் என்று கோருவதினின்றோ, எவ்வகையிலும் நம்மைத் தடுப்பதில்லை என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சட்டங்கள் ஆளும் வர்க்கங்களின் பாசாங்குத் தனத்தைத் தவிர வேறொன்றுமல்ல. 

இந்த சட்டங்கள் முதலாளித்துவத்தின் புண்களை வேகமாகத் தொற்றிப் பரவுகிற, கேடு விளைவிக்கும் புண்களாகத்தான் மாற்றுகின்றன. இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் வேதனை தருபவையாகும். மருத்துவப் பிரச்சாரத்திற்கு சுதந்திரமும் பிரஜைகளின், ஆண்கள் பெண்களின் சாதாரண ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பும் என்பது ஒன்று. 

நவீன மால்த்தூசிய வாதம் என்பது முற்றிலும் வேறானதாகும். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் எப்போதும் அந்தப் பிற்போக்கான, கோழைத்தனமான தத்துவத்தை நவீன சமுதாயத்தில் மிகவும் முற்போக்கான, மிகவும் பலம் வாய்ந்த வர்க்கத்தின் மீது, மாபெரும் மாற்றங்களுக்கு மிகவும் தயாராயுள்ள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கான முயற்சிகளை எதிர்த்து மிகவும் உறுதியான போராட்டம் நடத்துவார்கள்.

- லெனின்

(பிராவ்தா, இதழ் 137, ஜூன் 16, 1913)

ஒரு கோப்பை 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும்,
ஆசிரியர்கள்: 
லெனின் & கிளாரா ஜெட்கின்.
தொகுப்பாசிரியர்: மகாராசன்.
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
யாப்பு வெளியீடு, சென்னை.
பக்கங்கள்: 170
விலை: உரூ 170/-
சலுகை விலையில்: உரூ100/-
அஞ்சல் செலவு: உரூ 20/-
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
பேச : 90805 14506

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள் - அங்கவை யாழிசை நேர்காணல்


பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்வது போல், அவர்களின் எதிர்காலத்திற்காக நல்ல புத்தகங்களையும் அறிமுகம் செய்து வழங்க வேண்டும் என்கிறார் இளம் எழுத்தாளரும், சித்த மருத்துவ மாணவியுமான அங்கவை யாழிசை.

இன்றைய சூழலில் அலைபேசி, இணையத்தளத்தில் இருந்து விடுபட்டு புத்தகங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள் மிகக்குறைவு. அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, பிளஸ் 2 முடிப்பதற்குள் ஏராளமான புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த அங்கவை யாழிசை. 

தான் படித்த நாவல்கள், புத்தகங்களில் கிடைத்த  அனுபவத்தை 'எழுத்துலகம் அகமும் புறமும்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் 19 வயதே நிரம்பிய இவர்.

ஆறு அருமையான புத்தகங்களைத் தேர்வு செய்து, அதுபற்றி இவரது பார்வையில் விமர்சனம் செய்துள்ளார். இது இவரது முதல் நுால் என்பதை நம்பமுடியவில்லை. அவ்வளவு பேராற்றல் இவரது எழுத்தில் உள்ளது. இந்த நுாலினை வாசிப்பவர்களை, அதில் இடம் பெற்றுள்ள ஆறு நுால்களையும் வாசிக்கத் தூண்டும் வகையில் அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

புதிதாக வாசிப்பைத் துவங்கும் இளைய தலைமுறைக்கு இவரது புத்தகம் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கும்.

சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவம் படித்து வரும் அங்கவை யாழிசை கூறியதாவது:

மதுரை மாவட்டம், சின்னஉடைப்பு கிராமம் சொந்த ஊர். பெற்றோர் மகாராசன் - அம்சம் இருவரும் ஆசிரியர்கள். அப்பா எழுத்தாளரும்கூட. 

வீட்டில் அப்பா அமைத்துள்ள செம்பச்சை நுாலகத்தில் பல்வேறு தலைப்புகளில் நுால்கள் இடம் பெற்றுள்ளன. பெற்றோர் எப்போதும் புத்தகங்கள் வாசிப்பதால் எனக்கும் சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பள்ளியில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளேன். ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர் அதில் உள்ள கருத்துக்கள், புரிந்ததைக் கட்டுரையாக எழுதி வழங்குமாறு பெற்றோர் என்னை கேட்டுக் கொண்டனர்; எழுதவும் வழி காட்டினர். இந்தப் பழக்கமே எனது முதல் நுால் வெளியாக ஊக்கமாக இருந்தது.

'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு’ என்ற புத்தகத்தைப் படித்த பின் டைரி எழுதும் பழக்கம் துவங்கியது. இன்று வரை எனது அன்றாட நிகழ்வுகளை டைரியில் எழுதி வருகிறேன். டைரி எழுதுவது எப்போதும் மன நிறைவைத் தருகிறது.

எந்தப் புத்கத்தை வாசித்தாலும் அந்தப் புத்தகம் ஒரு அனுபவத்தைத் தரும் என்பதைக் கற்றுக்கொண்டேன். முதலில் வரலாற்றுப் புத்தகங்கள், நாவல்கள் படித்து வந்தேன். அவை கற்பனை வளத்தைப் பெருக்குகின்றன. அதைத்தொடர்ந்து மற்ற புத்தகங்களை வாசித்து கட்டுரையாக எழுதினேன். அவ்வாறே 'எழுத்துலகம்: அகமும் புறமும்’ நுால் வெளியானது. இந்த நுாலைப்படித்தவர்கள் அதில் இடம் பெற்றுள்ள நுால்களைப் படிக்கத் துவங்கியுள்ளதாகக் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலக்கியம் மட்டுமல்லாமல், சித்த மருத்துவம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அவை விரைவில் வெளிவரும். கல்லுாரியில் பாடங்களைத் தவிர்த்துத் தினமும் இரண்டு மணி நேரம் புத்தக வாசிப்பைத் தொடர்கிறேன்.

பெற்றோரின் பொறுப்பு நல்ல உறவுகளையும், புத்தகங்களையும் குழந்தைகளுக்கு அளிப்பதாகும். இளைய தலைமுறையினர் அறிவுத் தேடலுக்கான, கருத்துள்ள புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டும் என்றார்.

- குணா.

நன்றி: தினமலர் நாளிதழ், சண்டே ஸ்பெஷல், 12.01.2025.

வாழ்த்துகள் அங்கவை யாழிசை.

ஏர் மகாராசன்

சனி, 11 ஜனவரி, 2025

பெரியார்: வாசிப்பும் மீள்வாசிப்பும் - மகாராசன்


ஒரு காலகட்டத்தில் பரவலாகப் பேசப்படும் ஒரு கருத்து, இன்னொரு காலகட்டத்தில் மீள்வாசிப்புக்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படும். எது தேவையோ அல்லது எது ஒத்துப்போகிறதோ அல்லது எது சரியானதோ, அதனை இந்தச் சமூகம் கையிலெடுத்துக் கொள்ளும். எந்தவொரு சமூகமும் தமது அரசியல் சமூகப் பண்பாட்டு அறிவுத்தளங்களில் வாசிப்பும் மீள்வாசிப்புமாகத்தான் கடந்து வந்திருக்கிறது அல்லது கடந்து கொண்டிருக்கிறது. 

ஈ.வெ.ரா பெரியார் இந்தச் சமூகத்தில்- இந்தச் சமூகத்தை முன்வைத்து நிரம்ப உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய கருத்துகளை இந்தச் சமூகம் மீள்வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்றுதான் அவரே வலியுறுத்தி இருக்கிறார். 

“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் என்னுடைய தேவை இருக்கும். அதற்குப் பிறகு ராமசாமின்னு ஒரு மூட கொள்கைக்காரன் இருந்தான் என்றுதான் உலகம் பேசும். 

ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக் குறைவு உள்ளவனாக இருக்கலாம். பல தவறுகள் செய்திருக்கக்கூடும். இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும். பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன்”.

“நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக ஒரு கருத்தை அப்படியே நீங்கள் நம்பி விடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் எல்லோரும் அடிமைகள்தான். யார் சொல்வதையும் கேட்டு, வேத வாக்கு என்று நம்பி நடப்பதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே, நான் சொல்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவை உண்மை என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை எனில், தள்ளி விடுங்கள்”.

“எவருடைய கருத்தையும் மறுப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை”.

இதெல்லாம் பெரியார் கூறியிருப்பவைதான்.

எதுவொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அதுபோலத்தான், பெரியாரின் கருத்துகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.

வாசிப்புக்கும் மீள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகாத அல்லது உள்ளாக்கப்படாத ஒருவரின் கருத்துகள், மத அடிப்படைவாதக் கருத்துகளைப் போலப் புனிதப்படுத்தும் தன்மைக்கு இட்டுச் செல்லும்.

பெரியாரின் கருத்துகளைப் புனிதப்படுத்துவது, பெரியாரின் கருத்துகளுக்கே முரணாகும். பெரியாரை மட்டுமல்ல; எவரையும் எந்தக் கருத்தையும் புனிதப்படுத்துவது பகுத்தறிவும் அல்ல.

பெரியார் குறித்த வாசிப்புக்கும் மீள்வாசிப்புக்கும் இந்தச் சமூகம் நகர வேண்டும் என்பதைத்தான் பெரியாரே விரும்பியிருந்தார். 

ஆயிரம் பூக்கள் மலரட்டும்;

ஆயிரம் கருத்துகள் மோதட்டும்.

சரியானது எதுவோ, அதுவே வென்று தீரும்.

கருத்தை, கருத்தாக எதிர்கொள்வதுதான் பகுத்தறிவு.

ஏர் மகாராசன்