வியாழன், 6 செப்டம்பர், 2018

சொல் நிலம் : மண்வாசனை நிறைந்த எழுத்துகள்:- பிரபு தனராஜ்.

மகாராசனின் சொல்நிலம் முழுதும் மண்வாசனை நிறைந்த எழுத்துக்கள். அனைத்து விசயங்களையும் விவசாயியாக / உழவனாக இருந்தே எழுதியுள்ளார்.

ஒரு விவசாயியாகவே கோபப்பட்டிருக்கார்.
ஒரு விவசாயியாகவே ரசிக்கிறார்
ஒரு விவசாயியாகவே காதலித்திருக்கார்.
ஒரு விவசாயியாகவே நொறுங்குகிறார்.
அத்தனை பக்கங்களும் நித்திலங்கள்.

சில முத்துக்கள்……

நகரம் பற்றி…
"கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ்வெளியாய்ச்
சுருங்கிப் போனது" என
ரத்தினச் சுருக்கமாய்ச் சொல்கிறார்.

மர நிழல் பற்றி…
மரநிழலில் இருக்கும்
செடிகளை வனமாக பாவிக்கிறார்.

"மனித நிழல்
போர்த்திய நாடு தான்
வெயிலில் வெந்து சாகிறது" என சபிக்கிறார்.

கள்ளிச்செடியைக் கூட
வேறு ஒரு கோணத்தில்
ரசனையாய் பார்க்க முடிகிறது இவரால்.

"வெம்பாலைச் சுமந்து
பசுந்தோல் மேனியில்
பச்சை உடுத்திச்
சிரிக்கிறாள், கள்ளி"
என்கிறார்.

வாழ்த்துக்கள் ஆசிரியரே…!

நண்பர் யாழ் தண்விகா கொடுத்த புத்தகம் ஒரு வழியாக வாசித்தாயிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக