வியாழன், 15 ஜூலை, 2021

என் எழுத்துகளின் நிறம்: மகாராசன்


மானுடத்தின் பாடுகளையும் நிலத்தின் பாடுகளையும் பண்பாட்டு நோக்கில் எடுத்துரைப்பதே எனது எழுத்துகளின் ஆத்மா என்று உணர்கிறேன். அந்த வகையில் மானுட விடுதலைக்கான அரசியல் தத்துவத்தின் நிறமான சிவப்பும், நிலம் உள்ளிட்ட சூழலியல் காப்புக்கான நிறமாகப் பச்சையும் சேர்ந்த செம்பச்சை நிறம் தான் எனது எழுத்துகளுக்கான நிறம். 

குறிப்பாக, தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் மரபில் காணலாகும் அறத்தையும் அழகியலையும் அரசியலையும் தனித்துவமாக அடையாளப்படுத்துவதே எனது எழுத்துகளின் தனித்துவமாகக் கருதுகிறேன்.

ஏர் மகாராசன்

**

ஒளிப்படம்: நித்யன்

2 கருத்துகள்: