செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீர்முலைத் தாய்ச்சிகள்: மகாராசன்

மணல் உடுத்திய பாதைகள்          வெறும் ஆறுகள் மட்டுமல்ல; கருந்தோல் மேனிகளில்உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்          அரத்த நாளங்களைப் போல,  நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்நீர் நாளங்கள்.     

கடைமடை நிலத்தாளின்                  மானம் போர்த்திய                                  நீர்ச் சேலைத் துணிகள்.             

மழையாள் வகுந்தெடுத்த      உச்சந்தலை நீர்க்கோடுகள்.      

பசுந்தாள் வேர் நாவுகளை நனைக்கும்உமிழ் நீர்ச் சுரப்பிகள். 

தொடை விரித்து ஈனும்                தாயவள் போல்,                                  உழவும் குடியும்                                நெல்லும் சொல்லும் ஈன்ற      நீர்முலைத் தாய்ச்சிகள்.

ஏர் மகாராசன்.


நன்றி:

ஓவியம்: இரவி பேலட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக