சனி, 11 நவம்பர், 2023

தீப ஒளித்திருநாள்:தமிழர் மரபு வேறு; ஆரிய மரபு வேறு - மகாராசன்



சூழ்ந்திருக்கும் இருளை விலக்கி, பொருள் இதுவென்று விளக்கிக் காட்டும் ஒளிப்பொருளை விளக்கு எனச் சுட்டுவதும், விளக்கேற்றுதலை வளமைப் பண்பாட்டு நடத்தைகளின் குறியீடாகவும் புலப்படுத்தி வந்துள்ளனர் தமிழ் முன்னோர். 

மழைக்காலக் கார்காலத்தின் மாலைப்பொழுது விரைவாகவே இருட்டத் தொடங்கிவிடும். இருளும் குளிரும் மிகுந்திருக்கும் கார்காலப் பெரும்பொழுதின் மாலைச் சிறுபொழுதை விளக்குகள் ஏற்றி, இருளையும் குளிரையும் விலக்கி வைக்கும் பண்பாட்டு நடத்தைகள் தமிழர் வழக்கில் இருந்திருக்கின்றன. அத்தகைய விளக்கேற்றும் பண்பாட்டு நடத்தையே மா ஒளித்திருநாளாக - தீப ஒளித்திருநாளாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. அதுவே கார்த்திகை மாதத்துத் தீப ஒளித் திருநாள் விழா. 

கார்த்திகை மாத ஒளித்திருநாள் வழக்கம் இன்னும்கூட இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், அத்தகையப் பண்பாட்டு நடத்தைகளுக்குச் சமூக முக்கியத்துவம் அளிக்கவில்லை. சூழலியல் அடிப்படையில் உருவான ஒளித்திருநாளுக்குப் பதிலாக, புராணக் கற்பிதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீபாவளி தமிழர் பண்பாட்டில் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் விசயநகரத் தெலுங்கின ஆட்சியாளர்களின் காலகட்டத்தில்தான்,  ஆரியத்தின் புராணக் கற்பிதங்களால் உருவாக்கப்பட்ட தீபாவளி முன்னிலைப்படுத்தப்பட்டது. 

தமிழர் மரபின் ஒளித் திருநாள் விழாக்களை முன்னெடுப்பதும், ஆரியப் புராணத் தீபாவளிகளைப் புறக்கணிப்பதும்தான் தமிழர் பண்பாட்டு மீட்பாகும்.

தமிழரின் தீப ஒளித்திருநாள் குறித்து நான் எழுதிய விரிவான கட்டுரையும், அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது கட்டுரையும் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளன.

https://maharasan.blogspot.com/2016/12/blog-post_41.html

https://aerithazh.blogspot.com/2018/11/blog-post_4.html

ஏர் மகாராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக