வியாழன், 18 மே, 2023

ஈழப்பனையும் குருவிகளும் : மகாராசன்


கண்ணீர் சுமக்கும் 
தொன்மங்கள் பரவிய
தொல் நிலத்தில்
சிதறிக் கிடக்கின்றன
விதைகள்.
கொத்துக் குண்டுகள் 
புத்தன் பெயரால் ஏவியதில்
காயம்பட்டு நிற்கிறது
நெடிய பனை.
குலைகள் பூத்து
உதிர்ந்த விதைகள்
வரலாறு படித்தன
தாய்ப்பனையின் 
எச்சம் உறிஞ்சி.
பாட்டன் பாட்டிமார்
அரத்தம் தோய்ந்த
காலடித் தடங்கள்
காயும் முன்னே
வேர்கள் பிடுங்குவதைப்
பார்த்துக் கொண்டிருக்குமா
விதைகள்.
ஓங்கிய உயரமும் 
அடர் கருப்புமென
அடையாளம்.
அரத்த வெள்ளம்
வடிந்த ஈரத்தில்
முளை கட்டுகின்றன
விதைகள்.
வடுக்களே
விதைகளாகும் காலம் முளைக்கிறது.
பனைகளும் முளைத்தன
நாடு முழுதும்.
கொஞ்ச காலத்தில்
பொடிப் பனைகள்
ஈனும் பருவத்தில்
குலையாய்க் தொங்கும்
ஈழம்.
கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு
மீண்டும் வரும்.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக