வியாழன், 18 மே, 2023

இனம் அழுத நிலம் : மகாராசன்


ஒரு நிலத்தில்
வாழ்ந்த இனத்தின்
இலைகளும் தளிர்களும் 
கிளைகளும் வேர்களும்கூட கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்டபோது 
கதறித்துடித்தன 
அழுகைக்கூக்குரல்கள்.
கையேந்திக் கிடந்த கண்ணீர்த்துளிகளும் உயிர்கொப்பளித்த அரத்தமும்
கசிந்து நசிந்து
மண்ணெல்லாம் சேர்ந்தழுதன.
அந்த நிலமும் இனமும் 
நீட்டிய கைகள்
எட்டாமல் போயிருக்கலாம்.
கடல் தாண்ட முடியாமல்
கால்கள் தவித்திருக்கலாம்.
புத்தன் பெயரால்
பெருங்கொலையில் துடித்திட்ட 
ஓர் இனத்தின் அழுகுரல்
உலகின் காதில் விழுந்தாலும் 
புரியாமல் போயிருக்கலாம்.
ஆனாலும்,
நம் காதில் விழுந்தது;
நமக்குப் புரிந்தது.
அதன் அழுகைமொழி புரிந்த
எட்டுக் கோடிப் பேர்களும்
உயிர் சாட்சிகளாய் நின்றது
அதனிலும் பெருந்துயரம்.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக