வியாழன், 27 ஜூலை, 2023

அதிகாரத்தின் அழிச்சாட்டியம் - மகாராசன்


உழந்தும் உழவே தலையென,
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதான அறமும் உயிர் நேயமும்
பெருகப் பெருக விளைந்த 
தமிழ் நிலத்தில்,
உழவர் உழைப்பின் 
உடல் நோகவும் உயிர் கரையவும்
உணர்வுப் பெருக்கில் 
தளைத்து வளர்ந்து,
பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப் பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்திப் பாழ்படுத்தும்
படுபாதகப் பாவத்தை,
வக்கிரமும் வன்மமும் காழ்ப்பும்
பழிவாங்கும் பகையுணர்ச்சியும்
திமிரும் ஆணவமும் கூடிய கொலைவெறியர்களால் மட்டும்தான் செய்ய முடியும்.

அந்தப் படுபாதகக் கொலைவெறியர்கள்தான்
அதிகாரத்தைப் போர்த்திக் கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள்.

வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்.

அழிச்சாட்டிய அதிகாரம் 
நாசமாய்ப் போகட்டும்.

ஏர் மகாராசன்
27.07.2023

நன்றி:
ஓவியம்: ம.இராமமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக