செவ்வாய், 9 ஜூலை, 2024

சேறு மணக்கும் கவித் தொகுப்பு - எழுத்தாளர் அகரன்


கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பான 'சொல் நிலம்' அடுத்து, பெரிய இடைவெளியில் வெளிவந்திருக்கிறது இந்த இரண்டாம் கவிதைத் தொகுப்பு.


புத்தகம் முழுமையும் மணத்திடுது மண்வாசம். நிலத்தாள்... வனத்தாள்.. முலைத்தாய்ச்சி.. எனக் கவிதை தோறும் மண்ணைப் பற்றிய வேராய்ப் பின்னிப் பிணைகிறார். வழக்கொழிந்து போன சில சொற்களை நமக்கு ஞாபகமூட்டுகிறார். வயலில் சேற்றில் உழவனுக்கு நண்பனாய் இருக்கும் மண்புழுக் கண்களால் இந்தக் கவிதைத் தொகுப்பை எழுதி இருக்கிறார். மும்முலைத் தாயவள் எனக் குறள் ஈன்ற தமிழைக் குறிப்பிடும் இடம் வெகு சிறப்பு.  

கேரளத்தில் உணவு திருடியமைக்காக அடித்தே கொல்லப்பட்ட மது பற்றியொரு கவிதை; அது நமது மனிதத்தை அசைத்துப் பார்க்கிறது. 

ஈழப் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை எனக் கவிஞர் தனது மண் மீதும், சமூகத்தின் மீதும் இருக்கும் அக்கறையை, கேள்விகளைக் கவிப்படுத்தி இருக்கிறார். 

சேறு மணக்கும் கவித்தொகுப்பின் நடுவில் அரசியல் வாசமும் தெளித்திருப்பது, ஒரு படைப்பாளனின் அடிநாதப் பண்பு. 

முற்றிலும் மண், வயல், வேர், மழை, நீர் என ஆக்கிரமித்திருக்கும் கவிதைகள் மேலோட்டமாய் வாசிப்போருக்கு இரண்டு மூன்று முறை வாசிக்கச் செய்யும். இதுவே இத்தொகுப்பின் நிறையும் குறையும்.

திரைக்கலைஞர் பொன்வண்ணனின் அட்டைப்பட வடிவமைப்பு சிறப்பு. உள்ளடக்கத்தை ஓவியமாய்த் தீட்டியமை அருமை. களையிழந்த பெண்ணொருத்தி, இலையிழந்த கிளை, அதிலமர்ந்த குருவி என நூறுபக்க விடயங்களுக்கு ஆகப்பொருத்தம்.  

வாழ்த்துக்கள் தோழர் ஏர் மகாராசன் 

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அகரன்,
கம்பம்.
***
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக