வெள்ளி, 23 நவம்பர், 2018

மிச்ச உசுரு :- மகாராசன்

அம்மா அப்பா செத்துப்போனா
சுடுகாட்டுக்குப் போய்ட்டு திரும்பும்போது,
நாமும் செத்துப்போயிருக்கலாம்னு தோனுமே,
அதுமாதிரி அனாதையாகிப் போன மனநிலையில இருக்காக
சனமெல்லாம்.

வயல், தோப்பு, தோட்டம், ஆடு, மாடு, வீடு என அத்தனையவும் வாரிச் சுருட்டி நாசமாக்கிவிட்டுப் போன இந்தப் புயலும் மழையும்,  உசுர மட்டும் விட்டு வச்சிட்டுப் போயிருக்கு.

உசுரக் கொடுத்த அத்தனையும்
போன பின்னால,
இந்த உசுரும் போயிருக்கலாம்.

நெலம் நெலம்னு கிடந்த
சாதி சனமெல்லாம்
நெலத்துல அழுது மடியுது.

இது தான் இந்தச் சனம்
வாங்கியாந்த தலையெழுத்து.

நெலத்த விட்டுப் போட்டு
நாங்க வெளியேறும் போது,
வேடிக்க பாக்குற சனத்தோடு
தலையெழுத்து மாறத்தான் போகுது
கல்லு மண்ணு திங்குற சனமாக.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக