வெள்ளி, 23 நவம்பர், 2018

சம்சாரிப் பிஞ்சுகள் : மகாராசன்

ஊருக்குச் சோறு போட
ஒழச்ச சனமெல்லாம்
ஒரு வாய்ச் சோத்துக்கு
ஊரிடம் கையேந்தி நின்றபோது
உக்கிப் போனது
நிலமும்.

புயலடித்துக் கூடிழந்த பிஞ்சுகளின்
கண்களில் கசிந்தது
பசியின் வலி மட்டுமல்ல;
சம்சாரி வீட்டுப் புள்ளைகளாய்ப்
பிறந்ததன் வலியும் தான்.

ஏர் மகாராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக