வெள்ளி, 23 நவம்பர், 2018

வலியெழுத்து : மகாராசன்

நாடிழந்த ஈழத் தமிழர்
அகதி வாழ்வின் வலியை,
இப்போது தான்
கூடும் வீடுமிழந்த சனமெல்லாம்
உணரத் தொடங்கியிருக்கிறது.

வெட்டியான் நிழலில் வெள்ளாளனும்
வெள்ளாளன் நிழலில் வெட்டியானுமாக
நிழல்களை  ஒன்றாக்கியது
அந்நிலத்துப்
போர்.

ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும்
சேரிக்குள்ளிருந்த குச்சுக் குடிசையவும்
வாரிச் சுருட்டி
ஊரையும் சேரியவும்
ஒன்றாக்கி விட்டுப் போயிருக்கிறது
இந்நிலத்துப்
புயல்.

அவர்களுக்கொரு நாடிருந்தது;
நமக்கொரு வீடிருந்தது.

இரு நிலத்துத் தமிழரும்
வாழ்விழந்து அகதியானோம்;
வலி சுமக்கும் பிறவியானோம்.

ஏர் மகாராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக