திங்கள், 8 ஏப்ரல், 2019

பெண் குலசாமிகள் : மகாராசன்


நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

கத்திய கதறலும்
பீறிட்ட அழுகையும்
சிந்திய கண்ணீரும் மட்டுமல்ல;
துணிவான போராட்டங்களும்
வீண் போவதில்லை.

நிலத்தைக் காத்த
பெண்குலசாமிகள்
எதிரிகளையும் துரோகிகளையும்
பழிவாங்கியே தீருவர்.

அந்தக் கண்ணீர்
கற்களை மட்டுமல்ல;
காவியெனப் படரும்
சர்வதிகாரத்தையும்
பிடுங்கி எறியும்.

கொத்துக் கொத்தாய்
ஒரு நிலத்தையும் இனத்தையும் கொன்றொழித்த
அரத்தம் தோய்ந்த
கைகளையும் உடைத்தெறியும்.

நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

ஏர் மகாராசன்
08.04.2019.

ஓவியம்
தோழர் இரவி பேலட்
Ravi Palette

3 கருத்துகள்: