திங்கள், 8 ஏப்ரல், 2019

மீள் களம் : மகாராசன்

பகையெல்லாம்
நமைக் கொல்லக் காத்திருக்கிறது.
துரோகமெல்லாம் கூட்டு சேர்ந்து
பகை முடிப்போம் என்கிறது.

பகையின் காவியுருவங்களும்
துரோகத்தின் முகமூடிகளும்
கையேந்தி
மடிப்பிச்சை கேட்டலைகின்றன.

பகையின் பக்கமும் நாமில்லை;
துரோகத்தின் நிழலையும் நம்புவதாயில்லை.

இப்போதைய சனநாயகமெல்லாம்
போலியென ஒரு நாளும்,
இப்போதைய நிலைப்பாடெல்லாம்
சந்தர்ப்ப வாதமென ஒரு நாளும்
மீளவும் பேசும் காலம்.

துரோகத்தையும் பகையையும்
வேரறுத்து மீளும்
தமிழ் நிலம்.

ஏர் மகாராசன்
28.03.2019.

ஓவியம்:
Vishnu Ram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக