வியாழன், 27 ஜூன், 2024

மண்ணின் மீதான தீராக் காதலைப் பேசும் கவிதைகள் - பேரா ம.பெ.சீனிவாசன்


சிற்பியின் "ஒரு கிராமத்து நதி" படித்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இன்று நான் படித்த கவிதைப் பனுவல், மகாராசனின் "நிலத்தில் முளைத்த சொற்கள்". 

தான் பிறந்து வளர்ந்து காலூன்றி நிற்கும் மண்ணின் மீதான தீராக்காதலே இக்கவிதைகளுக்கான பேசுபொருள். 

கிராமத்து மக்களின் "பழுப்பேறிய உழைப்பையும் வெள்ளந்திவாழ்க்கையையும் பற்றிய கவிதைகள் இவை." நிலத்தில் இந்தப் பாதங்கள் (அதாவது உழவரின் பாதங்கள்)/ நாளை இறங்கவும் மறுக்கும்போது/ வெண்பாதங்களின் கைகளும் தொழும்" என்பதும் இவர் கவிதைகளுள் ஒன்று. 

இந்த சனம் வாங்கி வந்த தலையெழுத்தைப் பற்றியும், தம்முடைய "நிலத்தாள்" பற்றியும் நூல்நெடுகிலும் பேசும் இந்த மக்கள் கவிஞர், தங்கள் ஊருக்கு ஒரு தலபுராணம் இல்லையே என்று வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. மகாராசன்! இந்தக்கவிதை நூலும் உங்கள் ஊர்த் தலபுராணம் தானே!.

சாகித்திய அகாதமியின் கண் படக்கூடிய பலகவிதைகள் இதில் தென்படுகின்றன. 

வாழ்த்துகள் மகாராசன். 

பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

***



நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை:₹100
வெளியீடு: யாப்பு பதிப்பகம் 
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக