வியாழன், 22 ஆகஸ்ட், 2019

வாழ்வெச்சம் : மகாராசன்

இன்னும் மிச்சமிருக்கும்
புழுதிக் காடுகளின்
பனையோலைத்
தூர் இடுக்குகளில்
எச்சங்களை விதைத்துச் சென்ற
ஒரு பறவையின் நம்பிக்கை
ஆலமாய் இறுகப் பற்றி வளர்ந்திருக்கிறது.

குஞ்சுகளோடு தூரியாட
உயிர் நீட்டித்
தொங்கிக் கிடக்கின்றன விழுதுகள்.

வெளிறிய வானத்தின்
திசைகள் தேடிய பறவைகள்
கூடு திரும்பும் நாட்களில்
மனிதர்கள் யாருமேயில்லை.

நாதியற்றுக் கிடந்தாள்
நிலத்தாள் மட்டும்.

ஏர் மகாராசன்.
19.08.2019.

நன்றி:
ஒளிப்படம்
தோழர் டி.அருள் எழிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக