வியாழன், 22 ஆகஸ்ட், 2019

முந்நிறத்துக் கயிறு : மகாராசன்

வயிற்றுக்குச் சோறிடும்
உழவரையெல்லாம் சாகடித்து,
கையளவு காணியவும்
பறித்துக் கொண்டு,
கம்பத்தில் பறக்கின்ற கொடியில்
மூவண்ணங்களில்
எக்காளமிட்டுச் சிரிக்கிறது
இந்தியம்.

பழுப்பேறிய உழைப்பும்
வெள்ளந்தி வாழ்க்கையும்
பச்சையம் போர்த்திய நிலமும்
நைந்து கிடக்கிறது எங்கும்.

கொடிக் கயிறுகளை
ஏற்றும் கைகளே
தூக்குக் கயிறுகளையும்
தந்து கொண்டிருக்கின்றன
இப்போது.

நாடு நலம் பெறட்டும்.

ஏர் மகாராசன்

ஓவியம்:
இரவி பேலட்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக