புதன், 13 மார்ச், 2024

அங்கவை யாழிசையின் வாசிப்பு உணர்வு - விஜயபானு


அன்பிற்கினிய அங்கவை யாழிசை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தங்கள் முதல் படைப்புக்குக் கூறுகிறேன். இவ்வாறு சிறுவயதில் தங்களின் பரந்த வாசிப்பு என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது.

தாங்கள் நூல்களை உள்வாங்கிய விதமும் அதை கட்டுரைகளாக எழுதிய விதமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. தாங்கள் எழுதிய ஆறு கட்டுரைகளும் ஆறு விதமான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இதிலிருந்து தங்களின் பரந்த வாசிப்பு உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தங்கள் வீட்டில் உள்ள செம்பச்சை நூலகம் போல் அனைவர் வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது அமைத்தால் இன்னும் பல யாழிசைகளைக் கேட்க முடியும் என்று தோன்றுகிறது. 

தாங்கள் எழுதிய கட்டுரையைப் போல் தங்கள் நூலுக்கும் வேறொருவர் கட்டுரை எழுதும் அளவிற்குத் தாங்கள் எழுத்து உலகில் பயணிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். 

எழுத்து உலகில் மட்டுமல்லாது, சித்த மருத்துவத் துறையிலும் சாதனை படைக்க என்னுடைய வாழ்த்துகள். தங்களை இவ்வாறு உருவாக்கிய தங்கள் பெற்றோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

அன்புடன்
திருமதி விஜயபானு,
ஆசிரியர்,
ஈரோடு.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக