வெள்ளி, 22 மார்ச், 2024

பூங்குருவி வாழ்க்கை - மகாராசன்


பூஞ்செடிகளின் 
இலைகளைத் தைத்து 
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் 
பெருமரத்து வேர்களின் 
நுனி முடிச்சுகளோடு 
கிளையில் துளிர்க்கும் இலைகளின் 
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.

இறகின் கனமும்
பூவின் மணமும் 
அரும்பிடும் வாழ்க்கை 
இனிதுதான்.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 20 - உலகச் சிட்டுக் குருவிகள் நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக