வெள்ளி, 29 மார்ச், 2024

பகையும் துரோகமும் - மகாராசன்


பகையெல்லாம்
நமைக் கொல்லக் காத்திருக்கிறது.
துரோகமெல்லாம் 
கூட்டுச் சேர்ந்து
பகை முடிப்போம் என்கிறது.

பகையின் காவியுருவங்களும்
துரோகத்தின் முகமூடிகளும்
மடிப்பிச்சை கேட்டு 
கையேந்தி அலைகின்றன.

கத்திய கதறலும் 
பீறிட்ட அழுகையும்
சிந்திய கண்ணீரும் 
வீண் போவதில்லை.

தாயகக் கனவு சுமந்த இனத்தை 
கொத்துக் கொத்தாய்ப் பறிகொடுத்த
நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

பகையின் பக்கமும் நாமில்லை;
துரோகத்தின் நிழலையும் நம்புவதாயில்லை. 

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக