செவ்வாய், 4 மார்ச், 2025

தமிழ்மொழிப் பாடத்தை, மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழை அவமதிப்பதாகும் - மகாராசன்


தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறையின் இந்தக் கல்வி ஆண்டுக்கான மேல்நிலை வகுப்பு (12 மற்றும் 11) பொதுத்தேர்வு நேற்றிலிருந்து நடைபெறத் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவுச் சீட்டில், மாணவர்கள் எழுதக்கூடிய பாடங்கள் மற்றும் தேர்வு நாள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்ப் பாடம் என்பதாகக் குறிப்பிடவேயில்லை. அந்த அட்டவணையில், தமிழ்ப் பாடம் என்பதற்குப் பதிலாக மொழிப்பாடம் (Language) என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 

தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.

தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 

இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும்.  இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.

தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 

தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.

தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 

ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

ஏழ்திணைக் காதல் - மகாராசன்


வெறுமை மண்டியிருக்கும் வாழ்நிலத்தில்
கூந்தல் சூடத் தவிக்கின்றன
கைக்கிளைப் பூக்கள்.

பறவையின் வரவுக்காய்
கிளைக்காம்பில் காத்திருக்கின்றன
பெருந்திணைக் கனிகள்.

மும்முலைத் தாயவளின் 
குறள் கசிந்த நிலத்தில் 
வான்முலைத் தாய்ச்சியின்
மழைப்பால் குடித்துத் தவழ்கிறது
ஐந்திணைச் செவல் காடு.

எழுதிணைக் காமத்தின்
இன்பத்தில் திளைக்கிறது ஏழ்பிறப்பு.

- மகாராசன்.

In emptiness -filled
habitat lands
longing to adore the hair
stands the flowers of one-sided love*.

Fruits of an elderly love*
alone on the branch it stands,
awaiting the bird's visit.

On land spilled with Kural*  
by a mother with three breasts,  
the red soil fields, 
rich with five kinds of love*,  
drink the milk that showers  
from the breast of the rain mother,  
as they crawl.

All seven births  
remain immersed in ecstasy,  
with seven types of cultural love and lust*.

* One-sided love: Unreciprocated sexual love, as one-sided. It is called Kaikkilai in Tamil. 

*Five kinds of love: The Love between a man and a woman is depicted through five distinct situations, each associated with one of the five tracts of land in Tamil culture.These are Kurinji, Mullai, Marutham, Neithal and Paalai. These five expressions of love are collectively known as Anbin Ainthinaigal in Tamil, representing the harmonious blend of nature and human emotions in Tamil literature.

* Elderly love: An inappropriate sexual relationship is called Perunthinai in Tamil.

*Kural: The ancient Tamil moral literature text Thirukkural consisting of 1330 short couplets of seven words each in kural venba form, wtitten by Thiruvalluvar. The book is divided into three sections Aram, Porul, Inbam. Considered one of the world’s greatest works on morality, this book is known for its generality and secular nature.

*Seven types of cultural love and lust: Ancient Tamil literature divides the life of the Tamils of that era into two broad categories:Internal life (Agathinai) and External life (Purathinai). Internal life refers to the intimate relationship between a man and a woman who live together in love and harmony. These inner emotions and experiences, which occur within the individual or between the couple, are collectively termed as Agathinai in Tamil. The ancient Tamil grammer text Tholkaappiyam divides the Agathinai into seven sections. These are: Kaikkilai, Kurinji, Mullai, Marutham, Neithal, Paalai, Perunthinai. Each of these sections represents specific aspects of love and emotions.

Poem by: Maharasan
Translated from Tamil by:
Padma Amarnaath.

ஓவியம்: கார்த்திகேயன்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

POEMS ARE TRULY BASED ON THE LAND :Review Note By Writer THANGES


Poet Maharasan's  'Words Sprouted in the Land'   after receiving good attention in Tamil, now  translated into English by the translator Padma Amarnaath. we can  say that the translator was fair enough in her work of  translation as she has made  the piece of literary work as a memorable one with her splendid talent of  translation.

All the fifty five poems in the text, originally written in tamil language are truly based on the land of this people who  inherited this land with all its ancient  civilization and with all its superior culture. To these people this land is the very important factor from which only all the branches of creation emerged out in the society.
Before entering in to Maharasan’s poetry we must make ourselves familiar with the Sangam Tamil literature to understand the core of his poems. People in this ancient  soil categorized this land as  Thinai and  Pozhuthu. This is called the Mudharporul, the  base of   sangam literature. There are five Thinais in sangam literature  called  Kurinji (mountainous regions), Mullai (pastoral forests), Marutham (riverine agricultural land), Neithal (coastal regions), and Paalai (arid regions). 
As well as we must know about the Perumpozhudhu sufficiently because this is perumpozhudhu  denotes the season in the  Sangam  Tamil literatue.   During  the perumpozhudhu seasons only the poetic  events occur  in Marutham thinai. Thus  this  perumpozhudhu is divided in to six periods, respectively  called Kulir kaalam, Kaar kaalam, Munpani kaalam, Pin pani kaalam, Ilavenir kaalam and Mudhuvenir kaalam.
These Thinai and Pozhuthu are very important factors in sangam literature with which one could easily identify the life, economy and the profession of the native people.  
So, the land and time are called the Mudharporul in sangam tamil literature. Apart from these there are other two aspects which are  included in  the sangam literature to understand the core of the verses.
They are called as Karupporul and Uripporul. The people, animals, birds, plants, music and musical instruments and God are called  Karuporul meaning the gist or the lives of the Thinai. 
The subject of the poems is called the Uripporul, meaning the base characteristic of the poems. Hence in Marutham thinai, the  infidelity of the hero and the resentment of the heroine is the Uriporul.
The primary objects and secondary objects are well interwined in sangam literature in Tamil. Before read any poem one should be thoroughly aware of all thes descriptions. Each  Thinai has unique feature of its own.
In a broad way the sangam literature was divided in to two major catagories respectively Aham (Inner) and Puram (Outer).
Aham (Inner): It is a type of Sangam literature in which the abstract discussion on human aspects is done. It signifies emotions and sentiments in the form of love, sexual relations, sensuality, etc. Aham poetry has additional categories, such as Ain-tinai (mutual love), Kaikkilai (one-sided love) and Perunthinai (unsuited love). Aham poetry uses metaphors and imagery. 
Puram (Outer): It is a type of Sangam literature related to exploits and heroic achievements in the form of Human experiences. Puram is a direct form of poetry. It signifies heroism, customs, social life, ethics, philanthropy, etc. About three-fourths of Sangam poetry is Aham-themed, while one-fourth is Puram-themed. Puram poetry also has categories based on activities like Vetchi (cattle raid), Vanchi (war preparation), Kaanchi (tragedy) and Paataan (elegy and praise) etc. Puram poetry is more direct and includes names and places.
Maharasan's poems sings all these five Thinais in the modern context in the modern form. Even though he depicts all the five Thinais in day to day life, he gives much importance to Marutham thinai. Marutham thinai  refers to the paddy fields and adjoining lands. It gets its name from the flowering Marutham tree which grows in farmlands. The  people once  living in this land  were  involving  in agriculture. 
People worked in fields, sowing, weeding and cultivating. The occupation of the people is mainly agricultural. Water buffalo, crocodiles, crabs, lotus, water lilies, herons, fish, pelicans live in the agricultural lands and they find their place rightly in Marutham thinai poems. Water bodies such as wells, ponds, rivers and streams could be seen in marutham land. Vanji, Kanji and Marutham trees grows here. These make the karuporul of marutham thinai poems.
Maharasan comes in the same heretity as he never forgets to record all these features in his poem in the modern time. He  carefully gives us the present reality that how far we people are diverted from this blessed life. The people of this heredity, today has almost, lost the legacy handed over to them by their forefathers. They should have inherited all these possessions from their forefathers. 
The unforgettable pain that aches his heart is poignantly reflected in every poem. The success of his being a poet is well reflected in this aspect. He is also able to transcend the same feelings to the readers. He begins as  
Words, soaked and flowing like liquid, 
nurture the land, helping  it grow green. 
Like a pregnant woman 
bearing a child in her womb, 
words carry soul 
that caresses the land.
To him  a word is not a mere tool for doing mere communication. He posses it as a child that carry the breath of its mother. Nothing could escape from his searching eye when he begins to depict the present  nature  in his poem. 
A small plant seen beneath a temple tower called his attention and he  immediately  describes  
beneath the temple tower’s shadow, 
the fig plant remains spying.   
The fig plant might be a mere plant or it might also be your good old culture. Because at present  no one comes forward  to save a race which was so superior  in knowledge and civilization once upon a time. He writes 
Within the sanctum, 
the hidden God 
as always and even now,
has no plans to step out. 
My village‘s sacred folk history 
remains unwritten till lost.  (verse 2)              It kindles the pathos of the present time. When you forget a village to focus, quite naturally you forget your own civilization.
Another remarkable aspect of this poet is he always reminds us the good old days  of  good old Tamil race which was so superior in its state once upon a time in the world.  
There is an inseperable umblical cord that binds Tamilians and Srilankan Tamils together. The brutal killing of  the innocent child Balachandran was poignantly  depicted in a poem that the small boy's last breathing  portrayed by the poet arise  uncontrollable pathos in the readers hearts.
When you read these four lines you can definitely come to conclusion that how worst the world is going now in the name of racism.
Aware of his fate of getting killed,
he sits  on the altar of racism,
innocently gazing, 
Balachandran’s eyes wander unknowingly. (verse 7)
In the good old past, on the mountains of Kurinchi thinai, a well disciplined communal society was built up by our ancestors and  that lasted for a long time. It taught the world the real civilization, humanism and the legacy of nature.
Like a deep green tent, 
The Mountain mother lies stretched out,
her human children 
were sent down gradually.
In the tribe’s land, the immigrants 
claimed the forest as their own, 
asending slowly step by step (verse 11)
This is how the native of the people were sent away from their lands by the immigrants once upon a time. 
Again and again the poet concentrates on  depicting the lives of poor people. They are giving their utmost  labour in the  field but in return gaining nothing as  profit  in a  modern society like this. 
We cannot cross them without feeling  much guilty conscience. For example in the  18th poem the opening lines begin like this 
Faded labour, 
innocent lives
and green - hued lands 
now resemble tattered  clothes, 
worn out and  decayed.
Similarly in 20th poem a poignant picture of peasant life is  captured.
Once who laboured to feed the world, 
now stand as a crowd 
begging with hands stretched.
for one mouthful of food,
the land was humiliated. 
Above all in verse number 21, the poet finishes his  lines like this
All faith once held on the land 
by this entire clan and crowd,
suffer and die now, on that same land.
Such is the destiny, 
this crowd has bought. 
The unending  pathos continues in the following lines when he writes like this 
Hands once filled 
with sweet -scented paddy grains,
generously given and donated,
now beg for a grain of cooked rice. (verse 22) 
When he describes about the paddy fields, we feel an immense pleasure piercing through our hearts. Because it reminds us the  good old days of our people. As everything  is gone now, we could  see the ashes of the dream only  now. In 27th poem he finishes the last Stanza as
In paddy grains and spoken words 
she lived like a folklore epic in the village- 
the farmer woman, now buried in the soil.
Had she seen today's barren lands,
her heart would ache and weep at this fate.
Similary in verse number 28th the poet’s heart is longing for the land to be cultivated for it’s own pleasure.
The dry rugged lands,
never touched by the plough’s share
yearn for furrows,
lying barren with dry, sticky grass. (verse 29)
Whether it is love or lust our life is chiefly associated with the land in which we are leading our lives. With out seeing the shadows of the Nature, one cannot imagine Maharasan’s poetry ever existed on the text.
The memories of heart is floating over in day to day life as it is well picturised in  the opening lines of poem number 31.
The memories of milky white  morning,
bursts in summer 
like Kapok cotton, 
basking in sunlight, 
drifting in a gentle breeze 
and  roams through.
The ecstacy of praising Nature continues in the next poem also as he captures a scene in the sunlight in the morning. 
Bathing in sunlight 
and smeared with turmeric 
the dry brown leaves 
swim drifting in the air 
arrive, kissing  the soil 
as they fall to the ground beneath the tree. (verse 32)
The pain that aching them cannot be felt every one as they feel because they are given the life with the agriculture.
Amidst the mushy land, heat and rain 
only the rolling and toiling farmers 
could feel the sorrow and pain 
of losing their land
and witnessing their plants die (verse 35)
A few poems only could go away from the traditional track of this line and they too  give us remarkable pleasure.
When he writes in poem number 37 and in poem 53 like this we are able to enterin to a different  show of  urban culture.
All  the empty cups 
get marked with lip prints, 
heaping tea’s  philosophy. 
Lingering  dreams 
flow like pleading imaginations, 
stay awake,yet untouched by sleep.
The Neithal thinai (about sea) is well expressed in the following lines in the poem 41. 
Foaminng with the sounds of the tide, 
she tunes and sings 
a lullaby of  life, 
smiling always- 
the sea mother.
If we start to quote the favourite lines they are so close to our hearts, then we will start to quote all the lines of the text. But before closing it reasonably, we should not forget to quote the ending lines of this text in poem 55. 
The life blooming
with weight of  wings 
and scent of blossoms 
remain sweet forever.
So I can say that the weight of Maharasan’s words, the aesthetic creation of its  blossoms get mingled in our memories and remain there more sweeter for a long long time there.
Equally I  am bound to appreciate the translator Padma Amarnaath for her extra ordinary effort for getting this remarkable translation.
Those readers who have the fortune of reading both the original text in tamil and  its translation in English will definitly feel that all the literary devices of original  text have been well translated in English  along with its  literary taste. I wish her to have a bright future as a talented  translator.
Here again I appreciate poet Maharasan  whole heratedlly and wish him to get a tremendous success for this creation in both languages.
                                                   With love,                                    Thanges,
Writer & translator.
*
WORDS SPROUTED IN THE LAND,
Author: MAHARASAN,
Translated from Tamil by:
PADMA AMARNAATH,
First Edition, January 2025, Pages 120,
Rs. 100/- 
Published by:
YAAPPU VELIYEEDU, 
Chennai - 600076, 
Cell: 9080514506.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்களும் மீள் உருவாக்கமும் - கவிஞர் ராணி கணேஷ்


நிலத்தில் முளைத்த சொற்கள். நிலத்தில் பயிர்கள் தானே முளைக்கும். ஆனால் நிலத்திற்கென்றே சில சொற்களும் இருக்கத்தானே செய்கின்றன. அவை நிலம் சார்ந்த - உழவு சார்ந்த - உயிர் சார்ந்த சொற்கள். அப்படியானால் நிலத்தில் முளைத்த சொற்கள் யாவுமே நிலத்தை மையப்படுத்திதானே இருக்கும். ஆம் நிலம் சார்ந்த, மண்மணம் கமழும் கவிதைகள் தாம் இந்த ஐம்பத்தி ஐந்து கவிதைகளும். நிலத்தை இப்படியெல்லாம் உருவகப்படுத்தி கவிதை எழுத முடியுமா என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. உயிரை உணரும் தருணத்தில் வரும் மறு உயிர்த்தலை, மரித்துக் கொண்டிருக்கையில் திடீரென மீட்கப்படுவதை உணர்ந்தால்தான் அறியமுடியும். அப்படித்தான் இவர்தம் கவிதைகளை வாசித்து உணரவேண்டும். ஒவ்வொரு கவிதையையும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் சொற்றொடர் கொண்டு தேர்ந்த சிற்பியின் கைப்பக்குவத்தில் வடித்துள்ளார். கருப்பம் கொண்ட பிள்ளைத்தாச்சியாய் உயிர்த்தலைச் சுமக்கின்றன நிலம் கோதிய மகாராசன் அய்யாவின் கவிதைகள்.

எழுதப்படாமலே போனது எனதூர்த் தலபுராணம் என்னும் சொற்களின் வேதனை நம்மையும் அசைக்கிறது. இப்படித்தான் எத்தனையோ கோவில்களும் சாமிகளும் நம்மைச் சுற்றிக் கவனிக்கப்படாமலும், களவு போய்க்கொண்டுமிருக்கின்றன. சாமி சப்பரம் ஏறி சுற்றி வரும்பொழுதாவது பார்க்கட்டும் தரிசாய்ப் போன நிலங்களையும், கண்ணீர் வறண்ட விவசாயியின் கண்களையும். முகமற்ற குறிகள் புணர்ந்து கிடந்த கருவறை என்பதைச் சிவன் கோவில் என்றே புரிந்து கொள்கிறேன். வளர்பிறையும் தேய்பிறையும் காலத்தில் கடப்பதை கருநாகம் சட்டை உரிப்பதில் அறியத்தருவதாய்க் கூறிச்செல்கிறார். பாம்புகள் சட்டை உரிக்கக் காலமுண்டா எனத் தெரியவில்லை. நாகமாணிக்கம் குறித்த பல்வேறு கதைகளைப் போல, பாம்பு உரித்த சட்டையை கண்ணால் காணும் வரை அதுவும் பொய்யாய் இருக்குமென்றே நினைத்திருந்தேன். தட்டான், பாம்பு, கெண்டை, நத்தை, தவளை என சிற்றுயிர்களோடு சேர்ந்தது தானே நிலம் சார்ந்த கிராம வாழ்க்கை. கவிதையின் உயிர்கள் எல்லாமே எனது பால்யத்தை ஞாபக்ப்படுத்துவதாய் இருந்தது.

‘மண்மீட்டிய வேர்களின் இசை...’ என்ன அழகான கற்பனை. மண்ணை நிலப்பெண்ணின் விரல்களாய் உருவகித்து, வீணையின் நரம்புகளென நீண்டு கிடக்கும் வேர்களை மீட்டுவதான கற்பனை இசை நம் செவிகளுக்குள்ளும் கேட்கத் துவங்குகிறது. ‘நனைந்து பசப்படித்த நிலம்’ இப்படியான சொல்லாடல்கள் தலை சாய்ந்து கிடக்கும் கதிர்களைப் போல பக்கங்கள் எங்கிலும் காணக்கிடைக்கின்றன. ஒன்றை ஒன்றாய் உருவகிப்பதும், அது பொருந்திப் போவதும், அதனை வாசகன் ஒவ்வொரு அர்த்தம் செய்து உணர்வதும், புதிய கோணத்தை யாரேனும் கண்டு கூறுவதும் கவிஞனுக்கு மகிழ்ச்சியான விஷயம் தானே. 

மதுவைப்பற்றிய கவிதை மதுவின் பாவப்பட்ட முகத்தையும் கலங்கமற்ற கண்களையும் மீள் உருவாக்கம் செய்கிறது. மது, பாலச்சந்திரன் என சமூகத்தில் நடந்த கொடுமைகளைக் கவிதைகளின் வாயிலாகத் தட்டிக்கேட்கிறார். நல்ல கவிஞர் தன் சுக துக்கங்களை, தன் மன உணர்வுகளைக் கவிதைகளில் தான் பெரும்பாலும் வடிப்பார். அப்படி எழுதப்படும் எல்லாக் கவிதைகளையும் நாம் வாசிப்புக்கு வைப்பதில்லை. சிலநேரம் மனம்முண்டி எழுதியவற்றை முகநூலில் பகிரவோ, நண்பர்களுக்கு அனுப்பவோ செய்வோம். கவிஞரானவர் உணர்ச்சிகள் நிறைந்தவர். உடனே எதிர்வினையாற்றக் கூடியவர். அப்படித்தான் கவிஞர்.மகாராசனும் சமூகத்தில் நடந்த அக்கிரமங்களைக் கேள்வியெழுப்பிச் செல்கிறார். எல்லாமும் நிலம் சார்ந்தே திடமாய்ப் பரந்து நிற்கிறது. 

நேற்றுதான் “செவ்வாய்க்கிழமை மதியத் தூக்கம்” என்ற திரு.சுகுமாரனது மொழியாக்கக் கதையை, விமலாதித்த மாமல்லன் அய்யா எழுதிய புனைவு என்னும் புதிர்ப் புத்தகத்தில் வாசித்தேன். அதிலும் அப்படித்தான், திருடன் என நம்பி சுடப்பட்ட மகனின் கல்லறைக்கு வரும் தாய் தன் மகன் குற்றவாளி இல்லை எனத் தீர்க்கமாய்க் கூறுவாள். அப்படியான சூழ்நிலையில் யாரோ செய்கின்ற செயலுக்கான / தவறுக்கான குற்றவுணர்ச்சி நம்மையும் பற்றிக்கொள்கிறது. நாமும் அதே மனித இனம் தானே. சமூகப்பொறுப்பு கொண்ட யாருக்குமே இந்த எண்ணம் வரத்தான் செய்யும். செய்யாத தவறுக்கு, தவறான புரிதலில் தண்டிக்கப்படும் ஆத்மாக்களை கடவுள் வேற்றுலகத்தில் என்ன சொல்லி வரவேற்பார்? ஒருவேளை இத்தனை மோசமான மனிதருக்கிடையே நீ இருக்கவேண்டாம் என்று கூறுவாரோ என்னவோ.

ஐந்தாவது கவிதையை, சுய ஆற்றுப்படுத்துதலைக் கவிதையின் வாயிலாகக் கண்டுக்கொள்ளும் தனியனின் சொற்களாய்ப் பார்க்கிறேன். மனிதர்களும் சிலநேரங்களில் நிலத்தில் துள்ளி விழுந்த மீனைப்போல மாண்டு போகின்றனர். மீன் நினைத்திருக்கக் கூடும் மறுபக்கம் பெருங்குளமொன்று இருக்கிறதென்று அக்கரைப்பச்சையென நம்பும் மனிதனைப்போல. 
மலைத்தாய்ச்சி, வனத்தாள், வனத்தாய்ச்சி, மரத்தாய்ச்சி, நீர்முலைத்தாய்ச்சி, நீர்ப்பால்தாய்ச்சி, கடல்தாய்ச்சி, மலையாள் இப்படியான வார்த்தைகளை இன்றுதான் வாசிக்கின்றேன். பிள்ளைத்தாய்ச்சி போல வனத்தாய்ச்சியும், மலைத்தாய்ச்சியும் மரங்களோடு, மிருகங்களோடும் மனிதர்களையும் வரித்துக் கொள்கிறார்கள். சமயத்தில் கொல்கிறார்கள். அதைத்தான் இயற்கை அளிக்கும் தண்டனையாகக் கூறுகிறார் கவிஞர். காலத்தில் கரைதலும் வாழ்வின் நிமித்தமானது. நல்லதொரு சொல்லாடல். அப்படித்தான் வாழ்க்கை தன் பயணத்தைத் தொடர்கிறது எல்லோருக்குமாய்.

விவசாயி நிலத்தில் இறங்க மறுத்தால் வெண்பாதங்களின் கைகள் தொழுதாலே பற்றும் என்று சாடுவதுடன், உழைப்பாளியின் வேதனையைக் கொப்பளங்களின் வழியே அறியத் தருகிறார். கவிதையின் மென்சோகத்தைத் தாண்டி, நினைவின் இடுக்கு, அடை காக்கும் மவுனம், நினைவுக் காலடி, முளைத்த கனவுகள் இப்படியான வார்த்தை அடுக்குகளில் லயிக்கின்றது மனம்.

பதினேழாவது கவிதை அத்தனை அழகு. கூடாக்காதலின் நினைவின் பெட்டகமென விரியும் ஒற்றையடிப்பாதையில் ஒட்டிக்கொள்ளும் நாயுருவி முள் குத்தி வலிப்பதில்லை. நெருஞ்சி முள்ளை மட்டுமே பார்த்துப் பழகிய கண்களுக்கு காதலின் நினைவுகள் நெருஞ்சிப் பூவைப் போல அழகாய் தெரிகிறது.
வாழ்விழந்த விவசாயிகளின் வலியையும், வேதனையையும், கண்ணீர்க்கதையையும் நிலத்தில் முளைத்த சொற்களைக்கொண்டு தூவிச்செல்கிறார் ஏர் மகாராசன் அய்யா. மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்புமாக அவை தளைக்கட்டும் அவர்தம் வாழ்வில் என்ற வேண்டுதலைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் என்ற சிந்தனையை விதைக்கிறது அவரது சொற்கள். நிலத்தாளின் தொப்புள் உறவை எப்படி முறிக்க முடியும்? உணவளிக்கும் நிலமுடையான் கையேந்தும் அவலம் இனியாவது நிகழாமல் இருக்க வேண்டும். மறைமுகமாய்ச் சொன்னாலும் மறைக்கமுடியாத சரித்திரத்தின் மிச்சமென எஞ்சி நிற்கிறது விதைப்பிற்குக் காத்திருக்கும் நிலம். 

புயலைக்குறித்த கவிதை வயநாடு நிலச்சரிவையும் அம்மக்களின் நிலையையும் ஒத்திருப்பது சோர்வை அளிக்கிறது. இயற்கை அன்னையின் கோபத்துக்கு இரையாகும் பிஞ்சுகளுக்கு என்ன சொல்லி வழியனுப்புவோம்? சிலநேரம் மற்றவர் துன்பத்தை உணர்த்த ஒரு துன்பத்தைத் தருகிறாளோ என்று கவிதையின் வாயிலாக எண்ண வைக்கிறார். மனிதனால் வீடும் கூடும் இழந்தவர்களின் வலியை இயற்கை நமக்கு எப்பொழுதாவது உணர்த்திச்செல்கிறது. உணர்தல் முக்கியம். நாடற்றவர்களின் வலியை வீடற்றவர்கள் உணரக்கூடும் தானே! அகதிகளாய் வாழும் மக்களின் அவலநிலையை அவர்தம் வாழ்க்கையை கவிதைகளின் வரிகளில் பதிந்திருக்கிறார். சொந்த நாட்டில் இருந்து விரட்டப்படுவதும், இனப்படுகொலையும் இன்றும் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அண்டைய நாடுகளில் நடப்பதை கண்பொத்தி கடந்து போய்விடலாம், வெகுநாள் வேண்டியிராது அப்படி ஒரு துன்பத்தை எதிர்கொள்ள.

இந்திரர் அமிழ்தமே தான் இந்த மழை… ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசம் இருக்கிறது இல்லையா? நெற்பயிரோ, காய்ந்த ஓலையோ, தான்தோன்றிப் புற்களோ அவற்றிக்கான மணம், நெடுநாள் ஊடல் என்று குறிப்பிட்டு கார்காலமழையை, மழைதரும் மண்வாசனையை எல்லா வரிகளிலும் புகுத்தியிருக்கிறார். குளுமையை சொற்களில் பரப்பி ஜில்லிட வைக்க நிலத்தில் முளைத்திருந்தால் தானே முடியும். 

இருபத்தி ஏழாவது கவிதை கிராமங்களில் இன்றும் எங்காவது நடமாடிக்கொண்டிருக்கும் குடுகுடுப்பைக்காரனையும், கிராமத்தில் வாழும் குடும்பச்சியையும் குறித்தது, பின் நிலத்தையும். எல்லாக் கவிதைகளிலும் நிலத்தின் தொடுகை இல்லாமல் இல்லை. நிலம் சார்ந்தே எல்லாமிருக்கிறது. தரிசாய்ப் போன நிலத்தினை எண்ணி மாண்டு மண்ணுக்குள் போனவளும் கண்ணீர் வடிப்பாள் என்கிறார். விதைத்த நிலத்தை வெற்றிடமாய்ப் பார்க்கும் கொடுமை யாருக்கும் வரவேண்டாம். மறந்துபோன குடுகுடுப்பைக்காரனை நினைவுபடுத்துகிறது இந்தக்கவிதை. பெரிய மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு வீட்டுவாசலுக்கு வந்து குறி சொல்வான். நல்லகாலம் பொறக்குது என்று சக்கம்மா வாக்கு சொல்பவனின் சொற்களை உள்ளிருந்தே கேட்டுக்கொண்டிருப்பார்கள். யாரும் அவன் முன்னர் வருவதில்லை. பெரும்பாலும் என்ன சொல்வானோ என்ற பயத்தோடே தான் கேட்பார்கள். மனோரீதியாக அவன் சொல்வது மனதைப் பாதிக்கும் என்றே நினைக்கின்றேன். ஒருமுறை பக்கத்து வீட்டில் முன் நின்று அங்கு ஒரு உயிர் பிரியப்போவதாகக் குறி சொல்லிச் சென்றான் ராப்பாடி. எதிர்வீட்டுப்பெண்ணும் அதைக் கேட்டு என்ன நடக்குமோ என்று தன் கவலையைப் பகிர்ந்தாள். மூன்றாம் நாளில் அந்த வீட்டில் முடியாமல் கிடந்த பாட்டி மரித்துப் போயிருந்தாள். இப்படியான சம்பவங்கள் போதுமாயிருந்தது அவன் மீதான பயத்தை நீட்டிக்க. ராப்பாடியும் குடுகுடுப்பைக்காரனும் ஒன்றில்லை என்றே நினைக்கின்றேன். ராப்பாடி சுடுகாட்டில் உருண்டு சாம்பலைப் பூசிக்கொண்டு அலைபவன். நடுராத்திரியில் தெருக்களில் அலைந்து பாடிவிட்டு , வாக்கு சொல்பவன். மண்டையோடுகளை மாலையாக்கி அணிபவன். காலையில் அரிசி வாங்க வருவான். மேலும் மாட்டோடு வருபவனையும் குடுகுடுப்பைக்காரன் என்றே சொல்வோம். பூம்பூம் மாட்டுக்காரன் குறி சொல்வதில்லை. நல்ல வார்த்தைகள் கூறி பாடல்கள் பாடி நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றான். மாடும் அவன் சொல்லும் நல்வாக்குக்குத் தலையை ஆட்டி ஆமோதிக்கும். இந்தக் கவிதை மறந்து போன ராப்பாடியை ஞாபகப்படுத்துவதாய் இருக்கிறது. 

இருபத்தி எட்டாவது கவிதையில், வேனிற்காலமும் அம்மை நோயுமென நிலத்தின் வெம்மை சார்ந்த நோயினை வேம்பு மரத்தாய்ச்சி எப்படித் தீர்க்கிறாள் என்று சொல்லும் போதே பயந்து முடங்கிக் கிடந்த மனித இனமென நவீன வியாதியான ஒட்டுவாரொட்டி கொரோனாவை ஞாபகப்படுத்தி முடிக்கிறார்.

காதல் காமம் கொண்டும் கவிதை எழுதத் தவறவில்லை மகாராசன் அய்யா. காமமெனும் பெருந்தீயை அடக்கிக் காத்திருக்கும் பெண்ணைப் போல நிலமகள் ஏர் பதியக் காத்திருக்கிறாள் என்று சித்தரிக்கிறார். பசி, தாகம் போன்ற உணர்வு தானே காமமும். அதனை நிலத்திற்குக் கடத்தி, உழப்படாத நிலத்தின் தாகத்தை இறுதி வரிகளில் புரியத் தருகிறார். கைசேராமல் போகும் பொருந்தாக்காதலின் நினைவுகளைப் பெருந்திணைச் சொற்கள் மழையில் கரைவதாய் உருவகித்துக் கூறுகிறார்.
“ நீ உதிர்த்துவிட்டுப் போன
   மென்னகைப் பூக்களை
   காயம்படாமல் கூட்டியள்ளி
   மனச்சுருக்குப் பையில்
  முடிந்து வைத்திருப்பதை
  தெரிந்தும் வைத்திருந்தாய் “
மறைகாலத்தின் களவுப்பூ இந்த கவிதையில் வரும் இந்த வரிகள் தான் எத்தனை அழகு. இருவர் மட்டுமே அறிந்த உணர்ச்சி. அது ஈர்ப்பாகவும் இருக்கலாம், காதலாகவும் இருக்கலாம், ஆசையாகவும் இருக்கலாம். கூடாக்காதலின் வலியைக் கூட இதமான உணர்வாக வெளிப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ முறைப்பெண்கள் ஆசைப்பட்ட கல்யாணம் கைசேராமல் காணும் இடத்தில் கிண்டல் பேசியும், கண்களால் நலம் விசாரித்தும் மனதை ஆற்றிக் கொள்கிறார்கள். தனக்கு பேசிய மாப்பிள்ளை என்ற பெருமூச்சில் ஒளிந்திருக்கும், கொட்டிவிடமுடியாத மீள்காதல். இந்தக் களவுப் பூ வாடுவதுமில்லை, கசங்குவதுமில்லை. அப்படியே பூத்த தினத்தின் மணத்தோடும், குணத்தோடும் பூஞ்சிரிப்போடு வளைய வருகிறது.

கால்த்தடம் மறைந்த ஒற்றையடிப்பாதையின் வழி மறைந்தாலும் பாதை அங்கேயே தான் இருக்கும் நம் மூதாதையர்களின் கால் படிந்த மண்ணோடு. நாம் செய்யவேண்டியதெல்லாம் அடர்ந்த செடிகளை அகற்றிப் பாதையை கண்டுகொள்வது மட்டுமே… மனப்பறவை உதிர்க்கும் இறகுகளென நினைவுகள் உதிரத்துவங்கும் காலத்திலும் வாழ்தலின் நிமித்தமானது வேடிக்கை மட்டுமே பார்க்க வைக்கிறது. விளைநிலங்களைச் கொல்லும் அரசியல்வாதிகளையும் அவர்தம் உறவுகளையும் சாடுகிறார் கவிஞர்.

 மலையாளின் குருதி கலந்த ஆற்றின் ஈரத்தில் கருவுரும் வயல் என்ற ஒப்பீடு எத்தனை அர்த்தகரமானது. தேன்சிட்டின் வாயிலாக வாழ்தலின் பக்குவத்தைச் சொல்லும் கவிஞர், வேர்களுக்கும் இலைகளுக்குமான காதலின் அத்தாட்சியாய் மலர்களை வர்ணிக்கிறார். இறகின் கனமும் பூவின் மணமும் அரும்பிடும் வாழ்க்கை இனிதுதான். கணமற்ற இறகுகள் பறப்பதற்கு ஏதுவானது. தன் வாழ்நாள் எல்லாம் வாசம் மட்டுமே பரப்பி, தேன் பகிர்ந்து, அழகாய் அரும்பிச் சிரிக்கும் வாழ்க்கை யாருக்குத்தான் பிடிக்காது?! 

கவிஞர் ஏர் மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்கள் களவு போன காணியை, இழவு காணும் குடும்பனை, வற்றிப் போன நதியினை, தரிசாய்க் கிடக்கும் பூமியினை, வறுமை, பசி, துக்கம், கண்ணீர் அத்தனையும் சட்டம் போட்டுக் காண்பித்தாலும் பூமியின் காதலை, காமத்தை, பேறுகாலத்தை, செழிப்பை, அழகை, அத்தியாவசத்தையும் சொல்லிடத் தவறவில்லை. சொந்தமண்ணைத் துறக்கும் அவலம் இனி யாருக்கும் வராது இருக்கட்டும். 
துரோகத்தின் நிழல் எந்த பொழுதிலும் படியாது இருக்கட்டும். 

ஒரு கவிதையில் வரும் வரிகளான, நினைக்க நீயில்லை; தலைதட்டவும் ஆத்தாளுமில்லை. இதில் தலைதட்ட ஆத்தாளுமில்லை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று எண்ணினேன். மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டிய முக்கிய கவிதைகள்தாம் இந்நூல். கொஞ்சம் கடினமான பணியாக இருக்கலாம். கவிஞர் கண்டுபிடித்த புதிய அம்மைகளை எந்தப் பெயர் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன். கட்டுரை, ஆய்வு என்று களமாடிக்கொண்டிருக்கும் ஏர் மகாராசன் அய்யா கவிஞராகவும் மிளிர்கிறார். இன்னும் இன்னும் கவிதைகள் இயற்றுங்கள். மறைந்து போன சொற்களை மீள் உருவாக்கம் செய்யுங்கள். புதிய சொற்களை உங்கள் அறிவு நிலத்தில் இருந்து அறுவடை செய்யவும், அந்நெல்மணிகளை எல்லோரும் உண்டு களிக்கவும் புதிதாய் எழுதிக்கொண்டே இருங்கள். கவிதைநிலம் மிகச்செழிப்பாக இருக்கிறது. வார்த்தைத் தேர்வுகள் அழகு. 
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி!
*
நிலத்தில் முளைத்த சொற்கள், மகாராசன், முதல் பதிப்பு,மே2024, யாப்பு வெளியீடு, சென்னை, பக்கங்கள் - 112, விலை: ரூ100/- புத்தகம் தேவைக்குப் பேச : 9080514506
*
கட்டுரையாளர் : கவிஞர் ராணி கணேஷ், துணை ஆசிரியர், தமிழ்வெளி இதழ். பப்புவா நியு கினியா.    
பப்புவா நியு கினி இந்திய சங்கத்தின் துணைத்தலைவர். பப்புவா நியு கினி தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். கதை, கவிதை, புத்தக மற்றும் திரைப்பட விமர்சனங்களை எழுதி வருபவர். 

நன்றி : காற்றுவெளி இதழ், மார்கழி 2024, இலண்டன் .


சனி, 1 பிப்ரவரி, 2025

WOVEN AN ENERGETIC WORK OF LITERATURE: Writer Sa.DEVADOSS


These days, most of the modern poets, function within the sphere of life of middle-class family’s lives and hence their frontiers of their spaces are limited and their travels restrained. Owing to this, there is no exuberance in the expression. No modernity. Hence, the reader feels unbearable sultriness.

But, Maharasan goes to a far extent yonder beyond all this. It puts forth the land, the fertility of the land, the prosperous life that results from the fertility of land. Or it registers the drought-stricken land and the ignominy that it causes. It depicts the peasant who strides majestically / dejected who is surrounded by herbs, creepers, trees, greeny crops, vermins, insects, water channels, rivers, seas, arid deserts, hillocks and mountains.

A brat moves forth all over the village at midnight making predictions and the next day, he arrives to collect his wages for those predictions. It is too common to collect either foodgrains or money as wages. The poet hints at that wages as “wages for predictions”. The poet claims that the brat gets what is his due. What has he given for getting what is his due. Here, it’s re-termed that what the peasant gives in return for being told the predictions are “wages for predictions” (kurikkooli in Tamil). 

Since, most folks have given his dues as foodgrains, the brat’s bag is too light, the peasant-woman eyes his bag and measures out foodgrains in excess. This makes the brat’s heart thaw. The peasant woman maintains,

Who measures their words with care, 

measures him with paddy grains. 

Such is the life of a peasant. (verse 27)

The differences between them vanish, and a wonderful moment blossom there. This verse is the magnum opus in this collection. 

Maharasan builds up his verse as an extension of oral tradition. The words that are not found in the dictionaries, come out of the tongues of cultivator and his pen jots them down directly.

“The peasant-woman sat erect sevakki”. The Tamil word “sevakki” means to sit erect. The words that have stayed with the village rustic from ancient times, just as the paddy grains. Which is why the poet writes,

The life blooming 

with weight of wings 

and scent of blossoms

remain sweet forever. (verse 55)

This is no ordinary expression. His phrase “seeds of words” is a noteworthy one. Yet, in another instance he writes, 

..this mother with water-laden breasts 

gave birth to paddy grains and words.

With water-laden breasts, like a mother she cares, 

yet, she ignites flames beyond compare. (verse 26)

While he compares nature with a mother, he hesitates what to compare a natural disaster with, he brings in the element of fire, an another manifestation of nature. In this way, he stokes the secrets / memoirs of the ancient past. That he state that elderly love and one-sided love are worthy enough to be spoken of. The Tamil literary heritage ignores these as improper sex. But, today these things cannot be ignored. The new variant confinement is that formats of sex need to be spoken of. 

He refers to this via Thirukural from the ancient past, putting forth women at the front.

Seen, heard, tasted and sniffed, 

the deeply felt, 

gushing container of lust 

awaits a blaze 

within the kitchen space. (verse 29)

Even as the political outlook and opposing spirit merge into one, Maharasan has a commitment to expose the ploys of cunning, slyness by causing awakening. The poet who is loyal to aesthetics, bears a witness to the brutality and cruelty that happen. Then it would be deemed that he has accomplished his contribution than ever before. 

Aware of his fate of getting killed, 

he sits on the altar of racism, 

innocently gazing, 

Balachandran’s eyes wander unknowingly. (Verse 7)

The line drawings of Pithan are moving towards creating a parallel text. Or they compliment the poems. The nature in all aspects assembles a woman, that too a mother. These drawings have bloomed a woman amidst plants, creepers, flowers and buds. The painter describes that blossoming that spreads great affection becoming a mother. 

As a poet, Padma Amarnaath recreates the poems in English. The challenge of translation has been accomplished giving space to English. Without changing the text into prose, she functions in the domain of poetry. The lines,

If only by destroying fields 

and killing the plants, 

should the lamps continue to burn, 

in that soil the farmers strew, 

cursing with hunger 

burning in their stomach, 

let everything burn, perish and turn to ashes. (verse 35)

bring out the fierceness of curse and frustration in translation. 

To sum up, the poet, the painters and the translator have clubbed together and have woven an energetic work of art. The reader who receives this as a gift has gained an opportunity. 

With felicitations, 
 Sa.Devadoss,
Writer & translator,
Sahitya Akademi Awardee.

*
WORDS SPROUTED IN THE LAND,
Author: MAHARASAN,
Translated from Tamil by:
PADMA AMARNAATH,
First Edition, January 2025, 
Pages 120,
Rs. 100/- 

Published by:
YAAPPU VELIYEEDU, 
Chennai - 600076, 
Cell: 9080514506.

வெள்ளி, 24 ஜனவரி, 2025

Poetic Words of Land: N.Vijayabanu.

The poems written in the text ‘Words Sprouted in the Land’ author Maharasan, is based on the society and culture of the Tamil farmers and their connection with their farmland.

In Tamil culture, agricultural land is not mere a source of income to the farmers, but it is deeply connected with their life and blood. 

The bond between the farmers and their lands are deeply depicted in this text. The language used in his poems not only gives the beauty of Tamil language, but it reveals the connection between the Tamil peoples culture and life is based on the land and topography of the land they live. 

The meaning of the poems differ from people to people according to their perception.In his poems we can see the poet’s indepth brilliance with his native land and his people. The struggles faced by the farmers after losing their farmlands are depicted in a sorrowful voice.

This English translation of this book ‘Nilathil Mulaitha Sorkal’ will reach the global readers and will reveal the Tamil culture to the entire world.

Translator Padma Amarnaath’s linguistic knowledge can be seen throughout the text. Some words are related only to our native Tamil culture, which cannot be related by other readers, but she had taken efforts to put suitable words for our Tamil native scripts. 

The meaning of the native words given below the poems is a good feature to the global readers and this work by the translator is in the appreciable manner. 

My heartfull wishes for his future achievements in literary world.

Book Review by:
Mrs N.VIJAYABANU
Teacher,
Erode.
*

WORDS SPROUTED IN THE LAND,
Author: MAHARASAN,
Translated from Tamil by:
PADMA AMARNAATH,
First Edition, January 2025, Pages 120,
Rs. 100/- 
Published by:
YAAPPU VELIYEEDU, 
Chennai - 600076, 
Cell: 9080514506.


செவ்வாய், 21 ஜனவரி, 2025

நமது குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகப் போராடுவார்கள் - லெனின்

:தொழிலாளி வர்க்கமும் நவீன மால்த்தூசிய வாதமும். 

பிரொகோவில் நடைபெற்ற டாக்டர்கள் காங்கிரசில் கருச் சிதைவுகள் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டு, ஒரு நீண்ட விவாதமும் நடைபெற்றது. லிச்குஸ், தாம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்கால நாகரிக நாடுகள் எனப்படுவனவற்றில் உள்ள கருவை அழிக்கின்ற மிக மிகப் பரவலான நடைமுறை சம்பந்தமான புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டினார்.

நியூயார்க்கில் ஓராண்டில் 80,000 கருச்சிதைவுகள் நடத்தப் பெற்றன. பிரான்சில் ஒவ்வொரு மாதமும் 36,000 வரை நடைபெறுகின்றன. செயின்ட் பிட்டர்ஸ் பர்க்கில் கருச் சிதைவுகளின் சதவீதம் ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. பிரொகோவ் டாக்டர்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்மானத்தில், செயற்கையாகக் கருச் சிதைவு செய்து கொண்டதற்காக ஓர் அன்னையின் மீது எத்தகைய கிரிமினல் வழக்கும் தொடுக்கக் கூடாதென்றும், ‘ஆதாய நோக்கங்களுக்காக’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அது சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீதுதான் வழக்குத் தொடர வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

விவாதத்தின் போது, கருச் சிதைப்புகளை தண்டனைக்குரிய குற்றமாக்கக் கூடாதென்று பெரும்பான்மையோர் ஒத்துக் கொண்டனர். நவீன மால்த்தூசிய வாதம் (கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது) எனப்படும் பிரச்சினை இயற்கையாக விவாதிக்கப்பட்டது; பிரச்சினையின் சமூகக்கூறு குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

உதாரணமாக, திரு. விக்தோர்சிக் பேசுகையில், ருஸ்கோயிஸ்லோவோ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி, “கருத்தடைச் சாதனங்களை உபயோகிக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டும்” என்று கூறினார். திரு. அஷ்ட்ராகான், கரவொலியின் பேரொலிக்கிடையில் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:

“குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படித் தாய்மார்களை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் கல்விநிலையங்களில் அவர்களை முடமாக்க முடியும். அவர்களுக்காகப் பங்கு பிரித்துக் கொடுக்க முடியும்; அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்குப் போகும்படி செய்ய முடியும்.”

இந்த செய்தி உண்மையெனில், திரு. அஷ்ட்ரகானுடைய இந்த வியப்புரைக்கு பேரொலி தரும் கரகோஷத்துடன் கூடிய வரவேற்பு கிடைத்ததென்பது உண்மையெனில், அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூட்டத்தினரில் பண்பாடற்ற மனப்பாங்கு உடைய பூர்ஷுவா, நடுத்தர குட்டி- பூர்ஷுவாவினர் இருந்தனர். அவர்களிடமிருந்து மிகவும் இழிந்த மிதவாதத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

எனினும், தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, மேலே குறிப்பிட்ட திரு. அஷ்ட்ரகானின் சொற்றொடரைவிட “சமூக நவீனபாணி மால்த்தஸ்-வாதத்தின்” முற்ற முழு பிற்போக்குத் தன்மை, அவலட்சணம் இவை குறித்த அதிகப் பொருத்தமான வார்த்தையைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.

“குழந்தைகளைப் பெறுங்கள்; ஏனெனில் அப்பொழுதுதான் அவற்றை முடமாக்க முடியும்...” அதற்காக மட்டுமா? நமது தலைமுறையை முடமாக்கி, நாசமடையச் செய்யும் இன்றைய வாழ்க்கை நிலைமைகளை நாம் எதிர்த்துப் போராடி வருவதை விடவும் மேம்பட்ட முறையிலும் அதிக உணர்வுபூர்வமாகவும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் அவர்கள் போராடுவதற்காக, என்றும் ஏன் இருக்கக்கூடாது?

இதுதான். பொதுவாக விவசாயி, கைவினைஞர், அறிவாளி, குட்டி பூர்ஷுவா இவர்களின் மனோநிலையைத் தொழிலாளியின் மனோ நிலையிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் தீவிர வித்தியாசமாகும். தன் அழிவை நோக்கி விரைவதாகவும் வாழ்க்கை முன்னிலும் கஷ்டமானதாக வருகிறது என்றும், உயிர் வாழ்வதற்கான போராட்டம் முன்னெப்போதையும் விடக் கொடியதாகி வருகிறது என்றும் தனது நிலைமையும், தன் குடும்பத்தின் நிலைமையும் மேலும் மேலும் மோசமாகி வருகிறதென்றும் குட்டி பூர்ஷுவா காண்கிறான், உணர்கிறான். இதுமறுக்க முடியாத உண்மையாகும். குட்டி பூர்ஷுவா இதை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கிறான்?

ஆனால் அவன் எவ்வாறு இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறான்.

நம்பிக்கைக்கு இடமின்றி அழிந்து வருகிற, தனது வருங்காலத்தைப் பற்றி பீதியடைகின்ற, மனச் சோர்வுக்கு கோழையாக உள்ள ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியென்ற முறையில் அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான். எதுவும் செய்ய முடியாது... நமது வேதனைகளையும், கடின உழைப்பையும், நம் வறுமையையும், நம் அவமானத்தையும் அனுபவிப்பதற்கு நமக்குக் குழந்தைகள் குறைவாயிருந்திருந்தால் - இவ்வாறு தான் குட்டி பூர்ஷுவா புலம்புகிறான்.

வர்க்க உணர்வுள்ள தொழிலாளி இத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்தகைய புலம்பல்கள் எவ்வளவு உண்மையானதாகவும், இதய பூர்வமானதாகவும் இருந்த போதிலும், அவற்றால் தனது உணர்வு மழுங்கடிக்கப்படுவதற்கு அவன் அனுமதிக்க மாட்டான். ஆம், தொழிலாளர்களும், பெருமளவிலான சிறு உடைமையாளர்களுமாகிய நாம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வருகிறோம். நமது தந்தையர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் நமது தலைமுறைக்கு வாழ்க்கை அதிகக் கடினமாயிருக்கிறது. 

ஆனால் ஓர் அம்சத்தில் நாம் நமது தந்தையர்களை விடவும் அதிர்ஷ்டசாலிகளாயிருக்கிறோம். போராடுவதற்கு நாம் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளோம், வேகமாகக் கற்றுக்கொண்டு வருகிறோம். நமது தந்தையர்களில் சிறந்தவர்கள் போராடியது போன்று தனி நபர்களாகப் போராடுவதற்கல்ல, பூர்ஷுவா பேச்சாளர்களின் கோஷங்களுக்காக அல்ல. அவை உணர்வில் நமக்கு அன்னியமானவை - மாறாக, நமது கோஷங்களுக்காக, நமது குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகப் போராடுவார்கள்; அவர்கள் வெற்றிவாகை சூடுவர். 

தொழிலாளி வர்க்கம் அழிந்து வரவில்லை, அது வளர்ந்து வருகிறது. மேலும் வலுவடைந்து வருகிறது; துணிவு பெற்று வருகிறது; தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது; தனக்குத்தானே போதனை பெற்று வருகிறது; போராட்டத்தில் புடமிடப்பட்டு வருகிறது. பண்ணயடிமைத்தனம், முதலாளித்துவம், சிறு உற்பத்தி இவை சம்பந்தமாக நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறோம்; ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கம், அதனுடைய குறிக்கோள்கள் இவற்றைப் பொறுத்தமட்டிலும் நாம் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் ஒரு புதிய மாளிகைக்காக ஏற்கனவே அஸ்திவாரமிட்டு வருகிறோம். நமது குழந்தைகள் அதைக் கட்டி முடிப்பார்கள். நாம் நிபந்தனையின்றி நவீன மால்த்தூசிய வாதத்திற்குப் பகைவர்களாயிருப்பதற்கு அதுதான் காரணம், அது ஒன்றே தான் காரணம். 

இந்த வாதம் உணர்ச்சியற்ற, தற்பெருமை கொள்ளும் குட்டி பூர்ஷுவா தம்பதிகளுக்குத்தான் பொருத்தமானது. 

“நாம் எப்படியோ சமாளித்துக் கொள்வதற்குக்கு கடவுள் அருள் புரிவாராக! நமக்குக் குழந்தைகள் இல்லாவிட்டால் மிகவும் நல்லதே” என்று பீதி நிறைந்த குரலில் அவர்கள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். 

இது, கருச் சிதைவுக்கு எதிரான சகல சட்டங்களும் நிபந்தனையின்றி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருவதினின்றோ, அல்லது கருத்தடை நடவடிக்கைகள் குறித்த மருத்துவ வெளியீடுகளை வினியோகம் செய்வது முதலியவற்றுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யவேண்டும் என்று கோருவதினின்றோ, எவ்வகையிலும் நம்மைத் தடுப்பதில்லை என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சட்டங்கள் ஆளும் வர்க்கங்களின் பாசாங்குத் தனத்தைத் தவிர வேறொன்றுமல்ல. 

இந்த சட்டங்கள் முதலாளித்துவத்தின் புண்களை வேகமாகத் தொற்றிப் பரவுகிற, கேடு விளைவிக்கும் புண்களாகத்தான் மாற்றுகின்றன. இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் வேதனை தருபவையாகும். மருத்துவப் பிரச்சாரத்திற்கு சுதந்திரமும் பிரஜைகளின், ஆண்கள் பெண்களின் சாதாரண ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பும் என்பது ஒன்று. 

நவீன மால்த்தூசிய வாதம் என்பது முற்றிலும் வேறானதாகும். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் எப்போதும் அந்தப் பிற்போக்கான, கோழைத்தனமான தத்துவத்தை நவீன சமுதாயத்தில் மிகவும் முற்போக்கான, மிகவும் பலம் வாய்ந்த வர்க்கத்தின் மீது, மாபெரும் மாற்றங்களுக்கு மிகவும் தயாராயுள்ள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கான முயற்சிகளை எதிர்த்து மிகவும் உறுதியான போராட்டம் நடத்துவார்கள்.

- லெனின்

(பிராவ்தா, இதழ் 137, ஜூன் 16, 1913)

ஒரு கோப்பை 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும்,
ஆசிரியர்கள்: 
லெனின் & கிளாரா ஜெட்கின்.
தொகுப்பாசிரியர்: மகாராசன்.
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
யாப்பு வெளியீடு, சென்னை.
பக்கங்கள்: 170
விலை: உரூ 170/-
சலுகை விலையில்: உரூ100/-
அஞ்சல் செலவு: உரூ 20/-
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
பேச : 90805 14506

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள் - அங்கவை யாழிசை நேர்காணல்


பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்வது போல், அவர்களின் எதிர்காலத்திற்காக நல்ல புத்தகங்களையும் அறிமுகம் செய்து வழங்க வேண்டும் என்கிறார் இளம் எழுத்தாளரும், சித்த மருத்துவ மாணவியுமான அங்கவை யாழிசை.

இன்றைய சூழலில் அலைபேசி, இணையத்தளத்தில் இருந்து விடுபட்டு புத்தகங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள் மிகக்குறைவு. அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, பிளஸ் 2 முடிப்பதற்குள் ஏராளமான புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த அங்கவை யாழிசை. 

தான் படித்த நாவல்கள், புத்தகங்களில் கிடைத்த  அனுபவத்தை 'எழுத்துலகம் அகமும் புறமும்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் 19 வயதே நிரம்பிய இவர்.

ஆறு அருமையான புத்தகங்களைத் தேர்வு செய்து, அதுபற்றி இவரது பார்வையில் விமர்சனம் செய்துள்ளார். இது இவரது முதல் நுால் என்பதை நம்பமுடியவில்லை. அவ்வளவு பேராற்றல் இவரது எழுத்தில் உள்ளது. இந்த நுாலினை வாசிப்பவர்களை, அதில் இடம் பெற்றுள்ள ஆறு நுால்களையும் வாசிக்கத் தூண்டும் வகையில் அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

புதிதாக வாசிப்பைத் துவங்கும் இளைய தலைமுறைக்கு இவரது புத்தகம் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கும்.

சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவம் படித்து வரும் அங்கவை யாழிசை கூறியதாவது:

மதுரை மாவட்டம், சின்னஉடைப்பு கிராமம் சொந்த ஊர். பெற்றோர் மகாராசன் - அம்சம் இருவரும் ஆசிரியர்கள். அப்பா எழுத்தாளரும்கூட. 

வீட்டில் அப்பா அமைத்துள்ள செம்பச்சை நுாலகத்தில் பல்வேறு தலைப்புகளில் நுால்கள் இடம் பெற்றுள்ளன. பெற்றோர் எப்போதும் புத்தகங்கள் வாசிப்பதால் எனக்கும் சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பள்ளியில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளேன். ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர் அதில் உள்ள கருத்துக்கள், புரிந்ததைக் கட்டுரையாக எழுதி வழங்குமாறு பெற்றோர் என்னை கேட்டுக் கொண்டனர்; எழுதவும் வழி காட்டினர். இந்தப் பழக்கமே எனது முதல் நுால் வெளியாக ஊக்கமாக இருந்தது.

'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு’ என்ற புத்தகத்தைப் படித்த பின் டைரி எழுதும் பழக்கம் துவங்கியது. இன்று வரை எனது அன்றாட நிகழ்வுகளை டைரியில் எழுதி வருகிறேன். டைரி எழுதுவது எப்போதும் மன நிறைவைத் தருகிறது.

எந்தப் புத்கத்தை வாசித்தாலும் அந்தப் புத்தகம் ஒரு அனுபவத்தைத் தரும் என்பதைக் கற்றுக்கொண்டேன். முதலில் வரலாற்றுப் புத்தகங்கள், நாவல்கள் படித்து வந்தேன். அவை கற்பனை வளத்தைப் பெருக்குகின்றன. அதைத்தொடர்ந்து மற்ற புத்தகங்களை வாசித்து கட்டுரையாக எழுதினேன். அவ்வாறே 'எழுத்துலகம்: அகமும் புறமும்’ நுால் வெளியானது. இந்த நுாலைப்படித்தவர்கள் அதில் இடம் பெற்றுள்ள நுால்களைப் படிக்கத் துவங்கியுள்ளதாகக் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலக்கியம் மட்டுமல்லாமல், சித்த மருத்துவம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அவை விரைவில் வெளிவரும். கல்லுாரியில் பாடங்களைத் தவிர்த்துத் தினமும் இரண்டு மணி நேரம் புத்தக வாசிப்பைத் தொடர்கிறேன்.

பெற்றோரின் பொறுப்பு நல்ல உறவுகளையும், புத்தகங்களையும் குழந்தைகளுக்கு அளிப்பதாகும். இளைய தலைமுறையினர் அறிவுத் தேடலுக்கான, கருத்துள்ள புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டும் என்றார்.

- குணா.

நன்றி: தினமலர் நாளிதழ், சண்டே ஸ்பெஷல், 12.01.2025.

வாழ்த்துகள் அங்கவை யாழிசை.

ஏர் மகாராசன்

சனி, 11 ஜனவரி, 2025

பெரியார்: வாசிப்பும் மீள்வாசிப்பும் - மகாராசன்


ஒரு காலகட்டத்தில் பரவலாகப் பேசப்படும் ஒரு கருத்து, இன்னொரு காலகட்டத்தில் மீள்வாசிப்புக்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படும். எது தேவையோ அல்லது எது ஒத்துப்போகிறதோ அல்லது எது சரியானதோ, அதனை இந்தச் சமூகம் கையிலெடுத்துக் கொள்ளும். எந்தவொரு சமூகமும் தமது அரசியல் சமூகப் பண்பாட்டு அறிவுத்தளங்களில் வாசிப்பும் மீள்வாசிப்புமாகத்தான் கடந்து வந்திருக்கிறது அல்லது கடந்து கொண்டிருக்கிறது. 

ஈ.வெ.ரா பெரியார் இந்தச் சமூகத்தில்- இந்தச் சமூகத்தை முன்வைத்து நிரம்ப உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய கருத்துகளை இந்தச் சமூகம் மீள்வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்றுதான் அவரே வலியுறுத்தி இருக்கிறார். 

“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் என்னுடைய தேவை இருக்கும். அதற்குப் பிறகு ராமசாமின்னு ஒரு மூட கொள்கைக்காரன் இருந்தான் என்றுதான் உலகம் பேசும். 

ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக் குறைவு உள்ளவனாக இருக்கலாம். பல தவறுகள் செய்திருக்கக்கூடும். இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும். பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன்”.

“நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக ஒரு கருத்தை அப்படியே நீங்கள் நம்பி விடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் எல்லோரும் அடிமைகள்தான். யார் சொல்வதையும் கேட்டு, வேத வாக்கு என்று நம்பி நடப்பதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே, நான் சொல்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவை உண்மை என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை எனில், தள்ளி விடுங்கள்”.

“எவருடைய கருத்தையும் மறுப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை”.

இதெல்லாம் பெரியார் கூறியிருப்பவைதான்.

எதுவொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அதுபோலத்தான், பெரியாரின் கருத்துகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.

வாசிப்புக்கும் மீள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகாத அல்லது உள்ளாக்கப்படாத ஒருவரின் கருத்துகள், மத அடிப்படைவாதக் கருத்துகளைப் போலப் புனிதப்படுத்தும் தன்மைக்கு இட்டுச் செல்லும்.

பெரியாரின் கருத்துகளைப் புனிதப்படுத்துவது, பெரியாரின் கருத்துகளுக்கே முரணாகும். பெரியாரை மட்டுமல்ல; எவரையும் எந்தக் கருத்தையும் புனிதப்படுத்துவது பகுத்தறிவும் அல்ல.

பெரியார் குறித்த வாசிப்புக்கும் மீள்வாசிப்புக்கும் இந்தச் சமூகம் நகர வேண்டும் என்பதைத்தான் பெரியாரே விரும்பியிருந்தார். 

ஆயிரம் பூக்கள் மலரட்டும்;

ஆயிரம் கருத்துகள் மோதட்டும்.

சரியானது எதுவோ, அதுவே வென்று தீரும்.

கருத்தை, கருத்தாக எதிர்கொள்வதுதான் பகுத்தறிவு.

ஏர் மகாராசன்



புதன், 27 நவம்பர், 2024

காத்திருக்கும் நிலம்


கடல்சூழ் வனத்தைப் போர்த்தி 
விரிந்து கிடந்த நிலப்புழுதியில் 
எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி 
எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு 
முளைத்துக் கிளைத்திருந்தது 
குலக்கொடியொன்று.

ஈரநெப்பு கசிந்த  மண்ணை 
இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள் 
ஆழஆழப் பதிந்ததில் 
நிறைந்து செழித்து 
வளம் கொழித்தன
மனிதப் பச்சையங்கள்.

பஃறுளியும் குமரிக்கோடுமாய் 
மூதாதை நிலம் 
செழித்துப் பரவியிருந்தது.
காலமும் கடல்கோளுமான ஊழ்வினை 
உப்புநீர் தெளித்து 
அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது.  

பரிணாமக் காலங்களை 
உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில் 
இங்கொன்றும் அங்கொன்றுமாய் 
விழுந்த வித்துகள் 
சிம்படித்துக் கிளைத்திருந்தன.  

கிளை பரப்பிச் சிலிர்த்து
சிரித்திருந்த பேரினத்திற்கு 
தாய் மடிகள் இரண்டிருந்தன.
இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக 
காலம் இசைத்த நெடும்பாடல் 
உலகத்தின் காதுகளில் 
நிரம்பி வழிந்திருந்தது.

பெருமரத்தின் வித்துகள் 
காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன.

விழுந்த திசையின் மண்ணின் வாகும் 
பருவ நேக்கும் சுழல் காலமும் 
உயிர்ப் படிமலர்ச்சியாய் 
வேறு வேறு முகங்களை 
தந்துவிட்டுப் போயின.

பூர்வத்தின் வேர்நுனி மணத்து 
தாய்நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு
பேருரு அடையாளத்தில் 
மினுத்திருந்தது இவ்வினம்.

அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து 
குஞ்சுகளைக் காக்க 
மூர்க்கமாய்ப் போராடின 
இரு தாய்க்கோழிகள்.

அறுந்துவிட்ட தொப்பூள்க்கொடியிலிருந்து 
உயிர்க்கொடிச் சிம்புகள் 
அத்துப் போகாமலும் இத்துப் போகாமலும் 
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

முந்நிறத்துக் கொடியாலும் 
முப்புரி நூலாலும் 
இறுகக் கட்டிய தொரட்டிகளால் 
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு 
சுருண்டு போயின வேர்கள்.

ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய 
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின் 
உயிர்ச்சத்தை உறிஞ்சி 
பெருவனத்தை வரைந்திருந்தது. 

மறப்பாய்ச்சலில் தேர்ந்திருந்த புலிகள் 
வன்னி நிலத்தில் அறம் பாடித் திரிந்தன.

கரு நாகங்களின் துரோகத்தை 
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த 
சிங்கக் கூர்வாளை 
ஏந்திச் சிரித்தான் புத்தன்.

தப்பிய புலிகளின் 
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது 
ஒரு நிலம்.

மகாராசன்.

Across the sea, 
on a vast stretch of land,  
the forest lay thick with dampness,  
shows its face, resembling our own,  
staying close and surrounded,  
slowly sprouted, branching out- 
our clan’s off shoot.

Roots dug deep,  
clutching the soaked dripping earth,  
grounding and etching our mark
filling lustrous growth and prosperity-
human eco-beeing thriving.

The Pahruli river once flowed 
from the Kumari mountains,  
through the wide expanse 
of our ancestral land, 
that lay fertile and boundless.

Until time's ill fate 
and tsunami's spree
that sprinkled its salted water 
and scattered lives far  and wide.

The sway of evolution
absorbed by the seeds of life's cycle
had fallen hither and tither,
now sprout anew on branches with vigor.

A race that spread its branches
stands laughing, thrilled and tall,
had twin mothers' laps now, to cradle. 

Though separated by two lands,  
they stood as one race,  
time sings its grand song,  
and the earth listens,  
ears filled and overflowing 
with echoes of this story.

Seeds of this mighty race tree  
flew through the air, filling the land.  

Where they fall, the soil and season,  
guided by the call of time,  
shaped their bloom  
with unique faces,  
a reflection of nature’s hidden wonders.

With the fragrance of ancient roots,  
smeared with the soil of the motherland,  
and holding grand symbols,  
this old race stood, sparkling bright.  

Against foreign kites that pecked,  
to protect their young hatchlings,  
both the mother hens  
fiercely fought and defended.  
From the severed umbilical cords,  
flakes of vitality
unbroken and unworn,  
continued to bring forth life.  

The sickle, tightly knotted with  
the tricolour flag  
and triple thread strands,  
cut the branches of this land.  

Now, with weariness 
and a sense of loss,  
the roots shrink where they dwell.  

Tap roots and fibrous roots  
belonging to this land,
drew life’s essence  
from the ancient red soil,  
forming a grand forest all around.  

The Tigers, masters of fierce leaps,  
roamed the Vanni land,  
singing their moral codes.  

While black snakes of treachery
are hidden beneath the armpit,  
Buddha stands laughing,  
holding the Lion's sword,  
stained with the blood of tigers.  

To imprint the foot prints
of the escaped tigers
awaits the motherland, with hopeful grace.   
Poem in Tamil by: 
Maharasan.

Translate from Tamil by: 
Padma Amarnaath 

செவ்வாய், 19 நவம்பர், 2024

அதிகாரத்தால் களவாடப்படும் எனதூர் சின்ன உடைப்பு கிராமத்தின் தலபுராணம் : முனைவர் ஏர் மகாராசன்

எவ்விதக் கைமாறுகளையும் எதிர்பார்க்காமல் நிலத்தில் பாடுபடுவதின் வழியாகத் தானும் உண்டு, இந்த ஊா் உலக மக்களும் உண்டு வாழத் தம்மையே அா்ப்பணித்துக் கொண்டிருக்கும் வேளாண் மக்களின் துயரங்களைக் கண்டுகொள்வதற்கோ அவா்களின் கண்ணீரைத் துடைப்பதற்கோ இன்றைக்கு எவருமில்லை.  வேளாண்தொழிலும் வேளாண் மக்களின் வாழ்வியலும் ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கப்பட்டுவிட்டன. மேலும் இன்றையச் சூழலில் புகுத்தப்பட்டுள்ள உலகமயமாக்கல் சார்ந்த நடைமுறைகளுக்கும் வேளாண்மை சார்ந்த மக்களும் தொழிலும் நிலங்களுமே முதல் பலிகடாக்களாக ஆக்கப்பட்டுள்ளனா்.

       தொழில் வளா்ச்சி எனும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள். முதலாளிகள், ஏகாதிபத்தியங்களால் நிறுவப்படுகிற தொழிற்ச்சாலை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கே இந்திய அதிகார மய்யம் முன்னுரிமை அளிக்கின்றன. அவற்றுக்கே ஊக்கமளிக்கின்றன. இவை போன்ற தொழிற்சாலைகளுக்கான இடங்கள், தொழி்ற்பேட்டைகள், வளாகங்கள், குடியிருப்புக்கள், சாலை, தொடா்வண்டி, வான்வழிப் போக்குவரத்து, நகரவிரிவாக்கம், தொலைத் தொடா்பு, உல்லாசக் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இதர வசதிகளும் நிரம்பிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற பல்வேறு தொழில் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்குத் தேவைப்படும் பெருவாரியான நிலங்களை அரசாங்கம் எனக் கருதப்படுகிற அதிகார மய்யங்களே தாராளமாய் கையகப்படுத்திக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. 

      வேளாண்தொழிலில் ஏற்பட்டுவரும் தொடா் நெருக்கடிகளைத் தாங்கமுடியாத ஒருபகுதி வேளாண்மக்களிடம் இருந்த பெருவாரி விளைநிலங்களை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும் சொற்ப விலைக்கு வாங்கி வளைத்துப் போட்டுவருகின்றனா்.  ரியல் எஸ்டேட் எனப்பெறும் விளைநிலத்தை விலை கொடுத்து வாங்கும் நில விற்பனைத் தரகுத் தொழில் குக்கிராமங்கள்வரை நீண்டுகிடக்கிறது.

       காலங்காலமாய் நிலத்தை மட்டுமே நம்பியிருக்கிற, வேளாண்தொழில் மட்டுமே தெரிந்திருக்கிற, வேளாண்தொழிலையே ஆதாரமாகக் கொண்டிருக்கிற, வேளாண்மையோடு ஒட்டி உறவாடுகிற ஆன்மாவைக் கொண்டிருக்கிற, வேளாண் தொழிலையே தமது பண்பாட்டு அடையாளமாகக் கொண்டிருக்கிற, வேளாண் மக்கள் என்றும் நெல்லின் மக்கள் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்கிற, காலங்காலமாய் குடிவழிமரபாய் வேளாண்தொழிலில் உழன்று வரும் வேளாண்குடிகளின் கனவும் வாழ்வும் மகிழ்வும் அமைதியும் சிதைந்துகொண்டிருக்கின்றன.  வேளாண்குடிகளின் கையளவு நிலம்கூட அவா்களிடமிருந்து அரசாங்கத்தாலேயே பறிக்கப்படுகின்றன.

       மலைகள், காடுகள், சமவெளிகள், கடல்சார்ந்த தொல்குடிகளின் - பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்து நிற்கவேண்டிய சூழல் இறுக்கம் பெற்று வருகின்றது.

       நகரமயம், தொழில்மயம், வணிகமயம், நவீனமயம், உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என அத்தனை மயங்களும் தானாய் உருவானவை அல்ல.  திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. மேற்குறித்த மயங்கள் பெருந்திரள் மக்கள் நலன் சார்ந்தவை அல்ல.  மாறாக பொருளியல் வளத்தைப் பெருக்கிக்கொண்ட - பிறா் உழைப்பைச் சுரண்டி உயா்த்திக்கொண்ட உடைமை வா்க்கத்தினரின் நலன் சார்ந்தவை.  குறிப்பாக பன்னாட்டு முதலாளிகள்- ஏகாதிபத்தியங்களின் நலன் சார்ந்தவை. இவற்றின் நலன்களைக் காக்கவே, நலன்களுக்காகவே தொல்குடி மக்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களும், வாழ்விடங்களும்  தொழில்வளா்ச்சிப் பயன்பாடு எனும் பெயரில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

       வேளாண் மக்களைக் குறித்தும் வேளாண் தொழிலைப் பற்றியும் எவ்விதக் கவலையும் அக்கறையும் கொள்ளாமல் வேளாண் நிலங்களையும் வாழ்விடங்களையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிப் பிடுங்கிக் கொண்டு வருகின்றன இந்திய அதிகார மய்யங்கள். 

       மன்னா்கள் அதிகாரம் புரிந்த பேரரசுக் காலங்களில்கூட நிலங்கள் பறிக்கப்பட்டாலும், அந்நிலங்களிலேயே உழவடை என்னும் பெயரில் வேளாண் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள்  இருந்தன. நிலத்திற்கான உரிமை வேண்டுமானால் பறிக்கப்பட்டிருக்கலாமே ஒழிய, நிலத்தோடு கொண்டிருந்த உறவு முற்றிலுமாகப் பறிக்கப்பட்டிருக்கவில்லை.

      இக்காலத்திய அதிகாரச் சூழலில்,  நிலத்திற்கும் உறவுக்கும் வாய்ப்பில்லை என்பதான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.  ஒட்டுமொத்த வேளாண்குடிகளின் எதிர்கால வாழ்வு  புதைகுழியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மலை, காடு, சமவெளி, கடல்வாழ் தொல்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்விடங்கள் பறிக்கப்படுவது கண்முன்னே நிகழ்கிறது.  மக்களையும் மண்ணையும் நேசித்த -  இயற்கை வளங்களைப் பாதுகாத்த - உலக மக்கள் உண்டு வாழத் தம் வாழ்வையே கரைத்துக் கொண்ட வேளாண் குடிகளின் ஒப்பாரிக் குரல்கள் புதைகுழி மேட்டிலிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

       ”இரவார் இரப்பார்க்கு ஒன்றுஈவா் கரவாது

        கைசெய்தான் மாலை யவா்”

என்பார் வள்ளுவா்.

      உண்டு வாழ்வதற்காக யாரையும் சார்ந்திருப்பதுமில்லை.  யாரிடமும் இரந்து நிற்பதில்லை. அதேவேளையில், பசியென்று தம்மிடம் வந்தவா்க்கு வயிறாறச் சோறு போடுதலைப் பண்பாட்டு ஒழுகலாய்க் கொண்டிருந்த வேளாண்குடிகளின் இயல்பை மேற்குறித்த குறளில் எடுத்துரைத்தார் வள்ளுவா்.  ஆனால் இக்காலத்தில் உழன்று தவிக்கும் வேளாண்குடிகளின் பாடுகளில் தவிப்பும் துயரமும் வலியும் அழுகையும் நிரம்பிக்கிடக்கின்றன.

      மரணித்தவா்கள் முன்பாகப் பாடப்பட்டுவந்த ஒப்பாரி, மரணிக்கப் போகும் தங்களுக்கே தாங்களாகவே பாடப்படுவதாக மாறியிருக்கிறது. எண்ணற்ற ஒப்பாரிக் குரல்களோடு கலந்துவிட்ட கிராமங்களுள் ஒன்றுதான் சின்னஉடைப்பு எனும் அழகிய கிராமம்.

       தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த மதுரையைச் செழிப்பான மாநகராய் உருவாக்கியதில் அதனைச் சுற்றியுள்ள வேளாண் கிராமங்களின் பங்களிப்பு நிரம்ப உண்டு. அதனால்தான் மற்ற நகரங்களைக் காட்டிலும் மதுரை மட்டும் கிராமியத் தன்மையை மாற்றாமல் வைத்திருக்கின்றது. இத்தகைய மதுரையின் வரலாறும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. 

       மருத மரங்கள் செழித்து நின்ற நிலப்பரப்பின் வயல்வெளி சூழ்ந்த பெரும்பகுதியே மருதம் எனப்பட்டிருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை உற்பத்தி மருத நிலத்தை வனப்பும் வளமும் கொண்டதாக ஆக்கியிருக்கிறது.  மருதம் என்பது வேளாண்மை சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கை, பண்பாடு, ஒழுக்கம்,கலை, இலக்கியம், வழக்காறுகள் போன்றவற்றின் குறியீடு.  மருதம் என்பதுதான் நாளடைவில் மருதை -  மதுரை என்பதாக மாறியிருக்கிறது.

       நெடுங்காலமாய் நிலைத்திருக்கும் மதுரையின் வரலாற்றில் வேளாண் குடிகளின் வரலாறும் இரண்டறக் கலந்திருக்கிறது.  அதாவது மருதநில வேளாண் குடிகளின் உழைப்பும் வியா்வையும் குருதியும் கனவும் சோ்ந்த உருவாக்கம்தான் மதுரை.  வேளாண்குடிகள் மற்றும் வேளாண்குடிகள் சார்ந்த இதரக்குடிகளின் உருவாக்கத்தில் செழித்ததுதான் மதுரை.

       மல்லன்மூதுார் எனக் குறிக்கப்படும் மதுரையின் வரலாற்றோடு வேளாண்குடிகளின் குருதி தோய்ந்த வரலாறும் புதையுண்டு கிடக்கிறது.  மல்லன் மூதுாராம் மதுரையின் வரலாற்றின் கொடிய துயரங்கள் நேற்றோடு முடிந்துவிடவில்லை.  இன்னும் தொடரத்தான் செய்கின்றது. துயரங்கள் சுமக்கும் எண்ணற்ற கிராமங்களுள் ”சின்ன உடைப்பு” எனும் கிராமமும் ஒன்று.

       மதுரையின் தெற்கு நுழைவாயில் எல்கையில் அமைந்த முதல் கிராமம்தான் சின்ன உடைப்பு. இக்கிராமம் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையின் மய்யப்பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.  வேளாண்தொழில் சார்ந்த குடிகளோடும் இதரக் குடிகளோடும் காலங்காலமாய் நல்லுறவைப்பேணிவரும் இக்கிராமம் மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அயன் பாப்பாகுடி பெருங்கிராமத்தைச் சார்ந்த உட்கடைக் கிராமம் ஆகும்.  தற்பொது மதுரை மாநகராட்சியின் எல்லை இக்கிராமத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. 

இக்கிராமத்தில் வாழ்கிற மக்கள் யாவரும் வேளாண்தொல்குடிமரபு சார்ந்தவா்கள். கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்குள்ளன. மரபார்ந்த வேளாண்தொழில்தான் பெரும்பாலோரின் முதன்மைத் தொழில்.

       இக்கிராமத்தில் வாழும் இளம் தலைமுறையினா் யாவரும் பள்ளி, கல்லுாரிகளில் பயின்று வருகின்றனா். இளங்கலை, முதுகலை, முனைவா் பட்டதாரிகளும், பொறியியல், தொழில் நுட்பம் சார்ந்த பட்டதாரிகளும், வழக்குரைஞா். ஆசிரியா், பேராசிரியா்கள், அரசு ஊழியா்கள் என நிறையப்போ் கல்வி மற்றும்அரசுப்பணிகளில் பங்கெடுத்துள்ளனா். 

இதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களிலும், சுயமாகவும் தொழில் மேற்கொண்டும் வருகின்றனா்.  மேலும் அதிகளவிலான கொத்தனார்கள் இவ்வூரில் இருக்கின்றார்கள்.  பெண்களும் ஆண்களுமாய்ப் படித்துக்கொண்டும் வருகின்றார்கள். 

ஒரு நடுநிலைப்பள்ளி, கூட்டுறவுப் பயிற்சிக் கல்லுாரி, கிராமிய இறையியல் நிறுவனம் போன்ற கல்வி நிலையங்களும் இங்கு அமைந்துள்ளன.  பெரும்பகுதிப் பெண்களும் ஆண்களும் வேளாண்சார்ந்த தொழிலையே மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கிராமத்தின் மீது மட்டுமில்லாமல் சமூகத்தின் மீதும் சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டவா்களாக இக்கிராமத்தினா் இருக்கிறார்கள். அதனால்தான் சமூக நீதிக்காகப் போராடிய அம்பேத்கார் மற்றும் இம்மானுவேல் சேகரனார் ஆகியோரின் முழுஉருவச்சிலைகள் இக்கிராமத்தின் நுழைவாயிலில் அமைத்திருக்கின்றனா். 

யாருக்கும் அடிமைப்படாத - யாரையும் அடிமைப்படுத்தாத வகையில் தம்மைச் சுற்றியுள் அனைத்துக் குடிகளோடும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனா் இக்கிராமத்தினா்.  இங்குள்ள பெருவாரியான இளைஞா்கள் சமூகச் செயல்பாட்டோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனா்.  அம்பேத்காரிய – பெரியாரிய – மார்க்சிய – தமிழியச் சிந்தனைகளின் தாக்கம் இவா்களிடம் அதிகம் காணப்படுகிறது.

       சின்ன உடைப்பு கிராமம் மட்டுமல்லாமல் இதனைச் சுற்றியுள்ள பா்பானோடை, பெருங்குடி, பரம்புப்பட்டி, சம்பக்குளம், வலையபட்டி, கொம்பாடி, தொட்டியபட்டி, வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, கூடக்கோவில், பாரப்பத்தி, சோளங்குருணி, பிள்ளையார்பட்டி, குதிரைபத்தி, குசவன்குண்டு, கோனார்பட்டி, தின்னாநேரி, இலந்தைக்குளம், செங்குளம், ஈச்சநேரி, இராமன்குளம்,பெத்தேல்கிராமம், அவனியாபுரம், நிலையூர், பறையன்பாறை, கூத்தியார்குண்டு, மண்டேலாநகா் எனப் பல்வேறு ஊா்கள் சூழ்ந்த இப்பகுதியின் நிலப்பரப்பில் செம்மண்ணும் கரிசல்மண்ணும் விரவிக்கிடக்கிறது. 

       சின்ன உடைப்பு உள்ளிட்ட மேற்குறித்த கிராமங்களின் வாழ்வாதாரம் நிலத்தோடு தொடா்புடைய வேளாண்தொழில்தான். இக்கிராமப் புறங்களில் நெல், கரும்பு, வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை, பப்பாளி, முருங்கை, வெண்டை, தக்காளி, கத்தரி, மிளகாய், வோ்க்கடலை, கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, அவரை, துவரை, தட்டை, சீனிஅவரை, புடலை, பூசணி,  பீர்க்கு, கறிவேப்பிலை, கீரைகள் உள்ளிட்ட உணவுப் பயிர்களும் தானியப் பயிர்களும் பணப்பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. 

      பூக்களில் மனமிக்கதாய் உலகெங்கிலும் புகழ்பெற்றிருக்கும் தற்போது புவிசார் குறியீடு பெற்றுத் திகழும் மதுரை மல்லிகை இப்பகுதியில் பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இத்தனைக்கும் வைகையின் ஆற்றுப் பாசனம் முழுமையாகக் கிடையாது. அண்மையில் நிலையூர்க் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது.  ஆயினும் அதில் தண்ணீா் வருவதில்லை.  கிணற்றுப் பாசனமும் கண்மாய்ப் பாசனமும்தான் இப்பகுதியின் பாசனமுறை. மானாவாரியாய்ப் பெரும்பகுதி நிலங்களும் இப்பகுதியைச் சுற்றியுள்ளன.  வேளாண்தொழிலுக்கு உகந்த வாகுவை இவ்வட்டார நிலங்கள் கொண்டிருக்கின்றன. 

அதனால்தான் நிலத்தை விட்டுப் பிரியாமலும், நிலத்தைவிட்டுப் பிரிய முடியாமலும் நிலத்தோடே இன்னும் மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

        நிலத்தோடு தொப்பூள்க்கொடி உறவாய்க் கொண்டிருக்கிற இப்பகுதி வேளாண்குடிகளை நிலத்திலிருந்து அறுத்தெறிந்து அந்நியப்படுத்தும் வேலைகளைத்தான் இந்திய அதிகார மய்யங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இதற்குப் பலியாகிப்போன கிராமம்தான் சின்உடைப்பு.  பலியாகும் - பலியாகப்போகும் கிராமங்களின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்லவும் கூடும்.

       தொழில்துறை வளா்ச்சி எனும் பெயரில் பெரும்பாலான விளைநிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு வருவதால் எண்ணற்ற வேளாண் கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதன் இன்னொரு தொடா்ச்சிதான் மதுரை வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காகப் பெரும்பகுதி விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதுமாகும்.

       ஒரு பறவையைப் போன்ற இறக்கைகள் கொண்ட ஒரு பெரிய ஊா்தி வானில் பறந்து வந்து சின்னஉடைப்பு கிராமத்தின் மானாவாரி நிலப்பரப்பில் இறங்கும்; ஆட்களை ஏற்றிக்கொண்டு மேலே பறக்கும்; வேறெங்கோ ஆட்களை ஏற்றிவந்து இங்கிறக்கும் என்றவுடன் இவ்வூர்ப்பாட்டிகளும் பாட்டன்களும் வியந்திருக்கிறார்கள். நம்ம ஊருக்கு வானுார்தி வந்து செல்லப்போகிறது; நம்ம ஊருக்குத்தான் பேரும் பெருமையும் வரப்போகிறது.  இதனால் நம்ம ஊரு வளா்ச்சி அடையப் போகுது என நினைத்து இருப்பார்கள்.  இதனாலேயே 1940-களுக்கு  முன்பே மதுரை வானுார்தி நிலைய உருவாக்கத்திற்காகத் தமது பெரும்பகுதி வேளாண் புஞ்சை நிலங்களைச் சின்னஉடைப்புக் கிராமத்தினா் விட்டுக் கொடுத்தார்கள்.  அதற்கடுத்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கங்களின் போதும் நிலங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மதுரை வானுார்தி நிலையத்திற்குச் சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை வைக்கச் சொல்லிப் பலவாறும் போராடி வந்திருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேதான் கிடப்பில் வைத்திருக்கிறது இந்திய அதிகார மய்யம்.

       தம் ஊரின் நிலப்பரப்பில் பறந்து வந்து செல்லும் வானுார்தியைப் பார்த்துப் பெருமையும் வியப்பும் பட்டுக்கொண்ட இக்கிராமத்து மக்களுக்கு அவ்வானுார்திகளே குஞ்சுகளைத் தூக்கும் பருந்துகளாய் மாறியிருக்கின்றன.

       உள்ளூர், வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகள், பணக்காரா்கள் போன்ற உடைமை வா்க்கத்தினரும் நடுத்தர வா்க்கத்தினரும் வரவும் போகவுமான வான்வழிப் போக்குவரத்து வசதிகளுக்காக உருவாக்கப்படுபவைதான் வானுார்தி நிலையங்கள்.  மதுரை வானுார்தி நிலையமும் சின்னஉடைப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேளாண்மக்களோ அல்லது உழைக்கும் ஏழை எளிய மக்களோ பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பதை இப்பகுதி மக்கள் புரிந்துகொள்வதற்கு அரை நுாற்றாண்டுக்கும் மேலாகிப்போனது.

       தற்போது மதுரை வானுார்தி நிலையத்தைப் பன்னாட்டு வானுார்தி நிலையமாக ஆக்கிட வேண்டுமென்று உள்ளுா், வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளும் வணிக நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் பேரார்வம் காட்டுகின்றன.  இவா்களின் வணிக மற்றும் சுரண்டல் சந்தைக் களத்தை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவுமான வான்வழிப்போக்குவரத்து மதுரைக்கும் தேவைப்படுவதாய் இவா்கள் கருதுகிறார்கள். 

      உள்ளாட்சி தொடங்கி சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் வரையிலும் நீண்டு கிடக்கிற அதிகார அமைப்பானது முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் சேவகம் செய்யக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டு உள்ளது. அத்தகைய சேவகத்தின் ஒரு நிகழ்வுதான் மதுரை வானுார்தி நிலையத்தைப் பன்னாட்டு வானுார்தி நிலையமாக மாற்றும் திட்டம்.  இத்தகைய வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காகத்தான் கிட்டத்தட்ட 610 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களும் வேளாண்குடிகளின் வாழ்விடங்களும் கையகப்படுத்தப்படுகின்றன.  ஏற்கனவே வானுார்தி நிலைய உருவாக்கத்தின்போதும் அடுத்தடுத்த விரிவாக்கத்தின்போதும் சின்னஉடைப்பு மற்றும் பரம்புப்பட்டி கிராமங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட 1000 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களும் வாழ்விடங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையும் போதாதென்று பன்னாட்டு வானுார்தி நிலைய விரிவாக்கத்திட்டம் எனும் பெயரில் பெருவாரியான விளைநிலங்களும் வாழ்விடங்களும் கையகப்படுத்துவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துவருகின்றன.

       வேளாண்தொழிலில் ஏற்பட்டுவரும் தொடா் நெருக்கடிகளால் பல்லாயிரம் ஏக்கா் பரப்பிலான வேளாண் விளைநிலங்கள் வணிக நிறுவனங்களிடமும், முதலாளிகளிடமும், நகரவாசிகளிடமும் மிகக் குறைந்தளவு விலைக்கு விற்கப்பட்டு விட்டன.  நிலங்களை விற்றுவிட்ட பெரும்பாலோர் நகரங்கள் நோக்கிப் புலம் பெயா்ந்து கொண்டிருக்கிறார்கள்.  உதிரித்தொழிலாளா்களாய் மாறிப்போன அவா்களால் வாழவும் முடியவில்லை, சாகவும்முடியவில்லை. 

நகரவாழ்க்கை நரகவாழ்க்கையாய் மாறிப்போயிருக்கிறது.   இந்நிலையில்தான் சின்னஉடைப்பு, பாப்பானோடை. பாம்புப்பட்டி, இராமன்குளம், செங்குளம், குசவன்குண்டு பகுதிகளைச் சார்ந்த விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.  விளைநிலங்கள் மட்டும் அல்லாமல் காலங்காலமாய் வாழ்ந்து வந்த வாழ்விடங்களும் கையகப்படுத்தும் பகுதிக்குள் வருகின்றன.

       கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும் வரலாறும் கொண்டது சின்னஉடைப்பு கிராமம்.  தற்போது சின்ன உடைப்பு மற்றும் செங்குளம் கிராமங்களைச் சார்ந்த குடிமக்கள் தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  ஊாராய் உறவுகளாய் குடும்பங்களாய் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த அவா்களின் பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் சிதைந்துபோவதைக் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

       மனுக்கள் போட்டு நிர்வாகத்திடம் மன்றாடி; ஆர்ப்பாட்டம் நடத்தி, மறியல் செய்தெல்லாம் பார்த்தாயிற்று.  குலசாமிகளிடமும் வேண்டிப்பார்த்தாயிற்று.  நிலத்தை எடுக்க மாட்டார்கள்; ஊரை எடுக்க மாட்டார்கள் என அரசை நம்பினார்கள். நிலத்தை எடுக்கக் கூடாது; ஊரை எடுக்கக் கூடாது என சாமிகளையும் கும்பிட்டுப் பார்த்தார்கள்.   எல்லாம் எங்கள் சாமிபார்த்துக் கொள்ளும் என்று  நம்பிக் கிடந்தார்கள்.  ஆட்சி மாறினால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று மாற்றி மாற்றி வாக்களித்துப் பார்த்தார்கள்.  ஆனாலும் நிலத்தை எடுப்பது உறுதியாகிப்போனது.  ஊரை எடுப்பது உறுதியாகிப்போனது.  சாமிகள் மீதும் அரசுகள்மீதும் ஆட்சிகள்மீதும் வைத்திருந்த நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போயின.

       மதுரை வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக வேளாண் விளைநிலங்கள் குடியிருப்பு மனைகள்,  காலிமனையிடங்கள் போன்றவை உள்ளடக்கிய 610 ஏக்கா் பரப்பளவிலான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான கருத்துக்கேட்பு கூட்டங்கள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல ஆண்டுகளாய் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா கருத்துக் கேட்புக் கூட்டங்களிலும் சின்ன உடைப்பு மற்றும் சுற்று வட்டார வேளாண்மக்கள் தங்களுக்கு நேரப்போகிற நெருக்கடிகளையும், இழக்கப்போகும் வாழ்வாதாரங்கள் குறித்தும் தங்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாவதைப் பற்றியும் பலவாறாக எடுத்துரைத்து வந்துள்ளனா்.  ஆனாலும் அவா்களின் கோரிக்கைகள் குறித்துச் சிறிதளவும் பரிசீலிக்கவில்லை; பரிசீலிக்கத் தயாராகவும் இல்லை.  ஏனெனில் வானுார்தி நிலைய விரிவாக்கத்திட்டம் உள்ளுர் நிர்வாகம் எடுத்த முடிவல்ல. மாறாக இந்திய அதிகாரம் எடுத்த முடிவு.   இந்திய அதிகாரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் எடுத்தமுடிவு. இதில் உள்ளூர் நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ  என்ன செய்துவிட முடியும். தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள்  வேகமாக நடைபெற்று வருகின்றன.  அதன்படி  ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் எனும் பெயரில் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை அறிவித்தது. இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட சேதிகள்தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவனவாக இருந்தன.

       கடந்த 18.04.2013-ஆம் நாளில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.  இதில் சின்னஉடைப்பு, பரம்புப்பட்டி, பாப்பானோடை, பெருங்குடி, மண்டேலாநகா், செங்குளம், இரான்குளம், குசவன்குண்டு பகுதிகளைச் சார்ந்த பெரம்பாலோர் கலந்து கொண்டனா்.  இக்கூட்டத்தில்தான் கையகப்படுத்தப்போகிற வேளாண்நிலங்கள்,  தரிசு நிலங்கள், குடியிருப்பு மனைகள், காலிமனையிடங்கள் போன்றவற்றிற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட இருக்கிற இழப்பீட்டுத்தொகை குறித்த அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டது.  அதன்படி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னஉடைப்பு சுற்றுவட்டாரம் சார்ந்த குடியிருப்பு மற்றும் காலிமனையிடங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ஒருசெண்டு பரப்பிலான இடத்திற்கு ரூ.78.0000/- (ரூபாய் எழுபத்தி எட்டாயிரம்) எனவும், வேளாண் விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ஒரு செண்டு பரப்பிற்கு வெறும் ரூ.2,000/-(ரூபாய் இரண்டாயிரம்) எனவும் அறிவிக்கப்பட்டபோது எண்ணற்ற வேளாண் மக்களுக்கு நெஞ்சாங்குழை வெடித்துச் சிதறியது போன்ற துயரநிலையே ஏற்பட்டது. பலருக்கும் உடம்பெல்லாம் நடுங்கிப்போனது. எல்லோரது கண்களிலும் கண்ணீா் முட்டிக்கொண்டு வந்தது.  மனதுக்குள் ஏதோ ஒரு வகையான வலி நிரந்தரமாய்க் குடி கொண்டது.

       ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தலைமுறை தலைமுறையாய் கையளவு நிலத்தை நம்பி வாழ்ந்து வந்த வேளாண்குடிகளின் வாழ்வுக்கும் வாழ்விடத்திற்கும் வாழ்வாதாரமான நிலத்திற்குமான இழப்பீட்டுத்தொகை வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான் எனும்போது வலியும் அழுகையும் வராமலா இருக்கும்?  இந்த இழப்பின் வலிகளை எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் கோடிகள் கொடுத்தாலும் துடைத்திட இயலுமா ?  

       உயிரோடு உயிராய்,  உறவோடு உறவாய், உணா்வோடு உணா்வாய், நிலத்தோடும் வாழ்விடத்தோடும் இரண்டறகலந்துவிட்ட வேளாண்மக்கள் தங்கள் நிலத்தை இழக்கும்போது தங்கள் உடம்பில் ஓடுகிற உயிரின் சரிபாதியை உறுவி எடுப்பதைப்போன்றே உணா்கிறார்கள்.  தங்கள் உடலையும் உயிரையும் வெட்டி எடுப்பதைப்போன்றே துடிக்கிறார்கள்.

       ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் 

         தொழுதுண்டு பின்செல் பவர்.”  

       ” சுழன்றும் ஏர்பின்னது உலகம்  அதனால்

         ஊழந்தும்  உழவே தலை.”  

என்றெல்லாம் வள்ளுவா் பாடினார்.  வேளாண்குடிகளின் உழைப்பிலும் வேளாண்தொழிலாலும் மட்டுமே இந்த உலகமக்கள் இன்னும் உயிரோடு இருந்துகொண்டு வருகிறார்கள்.   அதனால்தான் வேளாண்தொழிலும் வேளாண்குடிகளும் தலையாய ஒன்றாகக் கருதப்பட்டன.  

வேளாண்குடிகள் தொழவேண்டிய குடிகளாக மதிக்கப்பட்டன.  ஆனால் நிகழ்கால சமூகமும் சமூக நிகழ்வுகளும், அதிகார மய்யங்களும் தொழில்வளா்ச்சித் திட்டங்களும் வேளாண்குடிகளின் வாழ்வாதாரம் குறித்தோ வேளாண்தொழிலைக் குறித்தோ கண்டுகொள்வதுமில்லை; கவலைப்படுவதுமில்லை.  புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும் வேளாண்குடிகளைக் காப்பாற்ற யாரும் முன்வரவுமில்லை.

சொற்பமான இழப்பீட்டுத்தொகை வழங்கி வேளாண்குடிகளை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.   தங்கள் நிலங்களையும் தங்கள் ஊரையும் இழந்து உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்ந்து வேறுவேறு ஊா்களுக்கும் நகரங்களுக்கும் பிழைப்புத்தேடிச்சென்று உதிரிகளாகவும் அனாதைகளாகவும் அகதிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆகிப்போகிற நிலைமைதான் எஞ்சி இருக்கிறது.  வழங்கப்போகிற சொற்பமான தொகையை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் ? எப்படி வாழமுடியும்?

சின்னஉடைப்பு கிராமத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான காலிமனையிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாளிகள், நகரவாசிகள் நடுத்தரவா்க்கத்தினா், வணிக நிறுவனங்கள் போன்றவற்றால் மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட விளைநிலங்களே காலிமனையிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.  இந்நிலையில் வேளாண் விளைநிலங்களுக்கும் காலிமனையிடங்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி ஒருசாண் அளவுள்ள வரப்புகள் மட்டும்தான்.

காலிமனையிடங்களில் ஊன்றப்பட்ட நான்கு நடுகற்களைத்தவிர வேறு எந்தச்செடி கொடிகளும் அந்தப் பகுதிகளில் முளைக்கவில்லை;  முளைக்கப்போவதுமில்லை.  ஆனால், தண்ணீா், வியா்வை, குருதி, உழைப்பு, மூலதனம் என அத்தனையையும் நிலத்தில் கொட்டி நிலத்தை மட்டுமே நம்பி வாழ்கிற வேளாண்குடிகளின் கையிருப்பாக எஞ்சியிருக்கிற விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான். 

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னஉடைப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருசெண்டு பரப்பிலான நிலத்தின் சந்தை மதிப்பு குறைந்த அளவு மூன்று முதல் நான்கு லட்சம் வரை நிலவிக்கொண்டிருக்கிறது. அரசுத் துறைப் பத்திரப்பதிவு அலுவலகங்களிலேயே இத்தகைய நிலவரம்தான். நிலமை இவ்வாறு இருக்கும்போது நிலத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட வேளாண்குடிகளின் ஆன்மாவாகத் திகழ்கிற விளைநிலங்கள் வெறும் இரண்டாயிரம் ரூபாய்தானாம்.  

காலிமனையிடங்களின் இழப்பீட்டுத்தொகையைக் காட்டிலும் விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை மிகமிகக்குறைவு. 

காலிமனையிடங்களை இழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைக் காட்டிலும் விளைநிலங்களை இழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களோ அதிகம். இதர தொழில் பிரிவினரைக் காட்டிலும் வேளாண்குடிகள் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்களே அதிகம். 

  புதைகுழி மேட்டிற்குத் தள்ளப்பட்டிருக்கும் வேளாண்குடிகளின் வாழ்வைக் காப்பாற்ற வேண்டுமானால் போராடும் பயணத்தைத் தொடா்ந்தாக வேண்டும்.

       மனித வரலாற்றில் போராடிய சமூகங்களே வாழ்ந்திருக்கின்றன. போராடாத, போராடத்தயங்குகிற சமூகங்கள் புதைகுழியில் வீழ்ந்திருக்கின்றன. பிறக்கின்ற எவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான்.  ஆனால் அந்த மரணத்தைப் பிறா் தருதல் கூடாது.  மரணம் ஒருமுறைதான்.  போராடி மரணித்தவா்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.


முனைவர் ஏர் மகாராசன்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.

நன்றி: தமிழர் பெருவெளி இதழ்,சனவரி-மார்ச் 2015

சனி, 16 நவம்பர், 2024

எல்லாச் சொல்லும் நிலம் குறித்தனவே - பேரா ம.கருணாநிதி

மகாராசனின் ‘நிலத்தில் முளைத்த சொற்களை’ மொழிதல்..

மகாராசன் ‘சொல் நிலம்’ (ஏர் வெளியீடு, 2017) கவிதைத் தொகுப்பினை அடுத்து ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ (யாப்பு வெளியீடு, 2024) எனும் கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். கருத்துலகிற்குப் பல நூல்களைத் தந்தவர், இதன்வழியாகப் படைப்புலகத்திற்குள் தன்னைத் தடம் பதித்துள்ளார். இவரின் இரு வேறு தொகுப்புகளின் பொருண்மை ஒன்றாக இருப்பினும் கவிதைகளின் மொழிதல் மாற்றம் பெற்றிருக்கிறது என்றே கூறவேண்டும். 

நிலமும் நிலம்சார்ந்த நிமித்தமும் என்று கூறுமளவிற்கு இவ்விரு தொகுப்புகளும் ஐந்து திணை உரிப்பொருள்களுக்கு அப்பால் நிலம் சார்ந்த புது உரிப்பொருளில் அமைந்துள்ளது. நிலமும் நிலத்தைச் சுற்றிச் சுழலும் வாழ்வியலை மட்டுமே தனக்கான படைப்பு வெளியாகக் கொண்டிருப்பதை இவரின் இவ்விரு படைப்பாக்கங்களின் வழி அவதானிக்கலாம். 

தமிழில் புதுக்கவிதை மரபில் வானம்பாடிக்கவிஞர்களின் கவிதை மரபு எல்லோருக்கும் புரியக் கூடிய எளிமையான தன்மையைப் பெற்று இருப்பதோடு கவிதைகள் முற்போக்குச் சிந்தனையைத் தாங்கியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான நவீன கவிதை மரபு எல்லோருக்கும் புரியாத பூடகத் தன்மையைக் கொண்டிருப்பதோடு மாற்று மொழிதலை கொண்டிருக்கிறது. 

நவீன கவிதை மரபில் இருண்மை எனும் குணநிலையைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் பல வாசிப்பிற்குட்படுத்தும் போது தான் அதன் பொருள்கொள்ளல் சாத்தியமாகிறது. அவ்வகையில் இருந்து மகாராசனின் கவிதைத்தளம் வேறுபடுகிறது. நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகள் யாவும் மரபிலிருந்து உருவாகி இருண்மைகளற்று மொழிதலைக் கொண்டிருக்கின்றன. ஓர் இலக்கியப் படைப்பாளி தம் படைப்பில் கலை நுணுக்கங்களையும், ரசனைகளையும் வெளிப்படுத்துவதோடு சமூக வாழ்வியலையும் தம் படைப்பில் வெளிப்படுத்த வேண்டும். 

அந்தவகையில், மகாராசன் நவீனக் கவிதை மரபில் நிலம், நிலம் சார்ந்த பருப்பொருளைக் கவிதையாக்கம் செய்ததில் புதுச்செல்நெறியில் பயணிக்க முனைகிறார். 

தொன்மை, பழமை என்று கூறப்படும் தொன்மத்தைக் கட்டவிழ்ப்பதும், கட்டுடைப்பதும், கட்டியெழுப்புவதுமான நிலையைத் தமிழ்க் கவிதைகளில் காணமுடியும். 

வானம்பாடிக் கவிஞர்கள் பெரும்பாலோர்த் தொன்மத்தை மறுவிசாரணை செய்தார்கள். எழுத்து இதழ் காலக் கவிஞர்கள் தொன்மத்தோடு பயணித்துத் தொன்மத்தைக் கட்டுடைப்பும் கட்டவிழ்ப்பும் செய்தார்கள். நவீன கவிஞர்கள் தொன்மத்தைக் கட்டுடைத்து மறு உருவாக்கம் செய்ததோடு புதுத் தொன்மத்தைத் தேடினார்கள்; பூர்வாங்கத்தைக் கவிதை வழி மொழிந்தார்கள்; தமக்கான தொன்மம் இவையெனக் கவிதைகளில் முன்வைத்தார்கள். 

ஆதித்தாயின் தொன்மத்தைத் தேடுவதாய் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகளாய் வெளிப்பட்டுள்ளன. தாயிக்கும், நிலத்திற்கும், மொழிக்கும், மக்களுக்கும் தொடர்பிருப்பதைக் கவிதைகளில் காணலாம்.

"உயிர்த்தலைச் சுமக்கின்றன / நிலம் கோதிய சொற்கள்' (ப.23) தொன்மங்களின் பூச்சுகள் கரைய /உயிர் வழியும் கண்களால் / கதைகள் ஒட்டி நிற்கின்றன" (ப.26) எனும் வரிகள் வளமைக்கானதாக அமைந்துள்ளன. “ஆழப் புதைந்திருக்கும் வேர்களை/ இறுகப் பற்றியது ஈரமண் / மண் மீட்டிய வேர்கள் இசை” (ப.28), பசப்பூறிய பூசனத்தின் ஈரத்தில் (ப.25), பச்சையம் போர்த்திய நிலமும் கந்தல் துணியாய் போயின (ப.49) வெறுமை மண்டி இருக்கும் வாழ்நிலத்தில்(ப.86) /ஈரமாய் பூத்து சிரிக்கின்றன/ நிலத்தில் கவிழ்ந்திருந்த வானம் (ப.87)/ காடும் மலையும் மேவிய நிலத்தில் (ப.29). / கசிந்து வழிந்த சொற்கள்/ உள் காயங்களின் வலியில்/ அணத்திக் கொண்டிருக்கிறது. (ப.31) தேர்ந்த வடிவ மொழிதலைக் கொண்டுள்ளன இக்கவிதைகள். 

கவிதைச்செல்நெறியில் மரபிலிருந்து விடுபடுதலும் மரபிலிருந்து புதுப்பித்துக் கொள்ளலும் மரபினை உடைத்தலும் நிகழ்கின்றது. இவை வடிவ, கருத்து ரீதியாக நிகழ்கின்றன. 

வேளாண்மைச் சடங்குகளின் தொடர்பாட்டினையும் சடங்கிற்கும் நிலத்திற்குமான உறவு நிலையில் கவிதை நிகழ்த்துதல்களின் பரிணாமங்களை விவரிக்கிறது. சடங்கில் இருந்து நிகழ்த்தலுக்கும், சடங்கிலிருந்து வேளாண்மைக்கும், சடங்கிலிருந்து வேளாண் உற்பத்திக்கும், உற்பத்தியிருந்து மனித உறவிற்குமானத் தொடர்பாட்டினைப் பல கவிதைள் காட்சிகளாக விரிகின்றன. 

வேளாண் சடங்கிலிருந்து வளமை வழியாக இன்பமும், இயற்தைச்சீற்றத்தின் வழி ஏற்படும் துன்பமும், துன்பவலியில் இருந்து உருவான படைப்பின் சொற்கள் ஆழ வேரூன்றி வெளிப்பட்டுள்ளன. நீரின்றித் தவிக்கும் திணைமாறியப் பறவைகளின் யாருமற்ற தனிமையில் முளைத்த சொற்களாய்ப் பதியம் இடுகிறார் மகாராசன்.

மனப்பறவை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் பூமியின் வறட்சியை ஆள் அரவமற்ற தனிமையில் வலசை தடங்களின் கதைகள் யாவும் கண்ணீர்கள் தூவிய பாதையாய் காட்சிப்படுத்தும் சொற்கள் என்றும் ஒரு பறவையின்வெளி வானத்தில் வலிகளோடு சிறகடித்துப் பறந்து, திரிவதைப் போல் துயரமொழி கவிதையில் வெளிப்பட்டுள்ளது.

ஓர் இலக்கியப் படைப்பாளி படைப்பின் வழியாக சமூகத்திற்கு ஏதோ ஒன்றை, சொல்ல நினைக்கும் தன்மை, படைப்பாளியின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. ஒரு படைப்பாளி மொழிதல் வழியாக இலக்கண மரபினைக் காட்டுவதோடு தொன்மையின் பருப்பொருளை உருவாக்குவது மட்டுமல்லாது கலை, இலக்கிய கொள்கைகளையும், உலகியலை நன்கு தெரிந்திருக்க வேண்டும். படைப்பாளியின் அழகியல், அனுபவம், விருப்பம், நுண்மை இவை படைப்பில் வெளிபடுவதன் மூலம் அப்படைப்பை வாசிக்கும் வாசகர் படைப்பாளியின் ரசனையோடும், அனுபவத்தோடும், வாழ்வியலோடும் தன் நினைவைப் பொருத்திப் பார்க்கிறார். 

அந்தவகையில் நிலத்தில் முளைத்த சொற்கள் தமிழ் நில அடையாளத்தை முன்வைக்கிறது. பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு, தமிழ் ஈழநிலம் மீண்டெழ முடியாமல் போன கதைபேசி, நம்பிக்கைக்கான விதைப்பினை சொற்களாக, குறியீடாக, தொன்மமாக விதைத்துள்ளது நிலத்தில் முளைத்த சொற்கள் தொகுப்பு. 

“ பூர்வத்தின் வேர் நுனி மணத்து / தாய் நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு / பேருரு அடையாளத்தில் / மினுத்திருந்தது இவ்வினம்./அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து/குஞ்சுகளைக் காக்க/மூர்க்கமாய்ப் போராடின/ இரு தாய்க்கோழிகள். “தப்பிய புலிகளின்/ கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது/ ஒரு நிலம்”(பக்.51-52) பேரினவாத்தின் அழிவிலிருந்து தனக்கான தமிழ் ஈழம் புத்துயிர் பெற்றிருக்கிறது என மொழிகிறது கவிதை.

காலம், களம் 

எல்லா நிகழ்வியத்திற்கும் காலம், களம் (Time, Space) முக்கியத்துவம் பெறும் என்பதே தொல்காப்பியம் வழிப்பெற்ற கவிதைக் கொள்கையாகும். காலம், களம் கூறுமிடத்து அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடைய கருத்துகளாகும். அவ்வவ்காலமே படைப்பின் வழிக் களத்தைத்தேர்வு செய்துகொள்வது நியதியாகும். கவிதையின் பொருள் சார்ந்து அணுகும் போது களம் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் கவிதைக்கான களம் என்பது ஒரு படைப்பாளி உருவாக்கிய படைப்பின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டினை அணுகுவதும், கவிதையின் மேல்நிலை, கீழ்நிலை, கிடைநிலை, புதைநிலை என்கிற தன்மையில் அணுகுவதும் கவிதையைப் புரிந்து கொள்ளுதல் சார்ந்ததாக அமைகிறது. 

வாசகரின் புரிதல் கொள்கை எனும் சிந்தனையும் இலக்கியக் கொள்கையாக உருவான பின்னணியில் தான் கவிதைக்களம், கவிதை அர்த்த தளம் என்பது முற்றிலும் வாசகர் சார்ந்ததாக அமைகின்றது. கவிதை வாசிப்பவரே கவிதைக்கான முழுபொருளைப் பெறுகிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியாகக் கவிதையில் அமைந்த தொனிப்பொருளை இனங்காணமுடிகிறது. 

அந்தவகையில் நிலத்தில் முளைத்த சொற்கள் எனும் கவிதைத் தொகுப்பு, வாசகரின் மனவெளியில் எளிமையாகப் பயணிக்கிறது. இக்கவிதைகள் யாவும் வேளாண் பண்பாட்டின் நீட்சியைப் பதிவுசெய்துள்ளன.

ஒவ்வொரு சொல்லுடனும் வாழ்வின் ஆதார உணர்ச்சிகளும் அவ்வுணர்ச்சிகளை உருவாக்கும் நினைவுகளில் காலவிரிவும் கலந்துள்ளது. அவற்றைக் கவிதைகளில் திறனுடன் பயன்படுத்தமுடியும். சரியாக அமைந்த ஒரு சொல் உணர்வுகளைப் பற்றியெரியச் செய்யமுடியும். மகாராசன் அதைக் கவிதைகளில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

தமிழ்க் கவிதை மரபின் மைய ஓட்டத்தில் இருந்து முற்றிலும் விலகிய தனித்துவம் கொண்ட கவிஞர்கள் அடையாளம் காணலாம். நகுலன், அபி, பசுவய்யா, கலாப்ரியா, சுகுமாறன், மனுஷ்யபுத்தின், கல்யாண்ஜி, தேவதேவன், பிரம்மராசன், விக்ரமாதித்யன் முதலானவர்களின் கவிதை மொழியும் , வாழ்வின் இருத்தலும், உவமை அமைப்பும், பேசுபொருளும், தமிழின் மொத்தப் புதுக்கவிதைப் பரப்பிற்குள் புதுப்புதுக் கோணங்களைக் கொண்டவைகளாகும். இவர்களின் கவிதைகள் வடிவழகியல் சார்ந்த தத்துவப் பின்புலத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்குலாப், தணிகைச்செல்வன், பழமலய், அறிவுமதி முதலானவர்களின் கவிதைகள் கருத்தழகியலில் மையங்கொண்டிருக்கின்றன. 

மகாராசனின் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ தொகுப்பு, நிலம் குறித்த அழகியலாக வெளிப்பட்டுள்ளது. மேலும் நிலமற்ற தினக்கூலிகளின் துன்பக்கதையைப் பேசி விரிகிறது. நிலமிழந்த விவசாயிகளின் வலிகள் நிறைந்த வார்த்தைகள் கவிதைகளில் காணலாம். வாழ்வதற்காகப் போராடுவதும், போராடுவதற்காக வாழ்வதுமான வாழ்வியலை நிலம் என்பது அடையாளமாகக் கவிதைகளில் இடம்பெறுகிறது. கவிதையில் செம்புலப் பெயல் நீராகிப்போன செவல்காடு அன்போடு கலந்திருக்கிறது.

(நிலத்தில் முளைத்த சொற்கள், யாப்பு வெளியீடு, மே2024, விலை : ரூ.100)

கட்டுரையாளர் : 
முனைவர் ம.கருணாநிதி
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) 
திருப்பத்தூர் - 635601, 
திருப்பத்தூர் மாவட்டம்
பேச 9500643148
karunanidhi@shctpt.edu