புதன், 20 டிசம்பர், 2023

வலியெழுத்து - மகாராசன்


அப்பன் ஆத்தாள் செத்துப்போனால் இடுகாட்டில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது 
கூடச்சேர்ந்து நாமும் செத்திருக்கலாமென 
வீடுவரை வந்துகொண்டே இருக்கும் 
அந்த நினைப்பு.

காடும் வயலும் தோப்பும் துரவும் 
ஆடும் மாடும் வீடும் என 
அத்தனையவும் வாரிச் சுருட்டிக்கொண்டு 
உயிரை மட்டும் விட்டு வைத்து நாசமாக்கிவிட்டுப் போயின 
புயலும் மழையும்.

உயிரைக் கொடுத்த 
அத்தனையும் போன பின்னால் 
இந்த உயிரும் போயிருக்கலாம். இப்போதும் அந்த நினைப்பு அழுகையோடு வந்து வந்து போகிறது.

நிலம் நிலமென்று நம்பியிருந்த 
சாதி சனமெல்லாம் 
நிலத்தில் அழுது மடிகிறது.

இந்தச் சனம் வாங்கிவந்த தலையெழுத்து இதுதான்.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக