வியாழன், 21 டிசம்பர், 2023

மழை வெள்ளமும் வதை நிலமும் - மகாராசன்



விதை நிலமெல்லாம் 
வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம் 
வயிறு காய்ந்து கிடக்கிறது.

வியர்வை மணக்கும் நெல்லை 
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் பருக்கைகளுக்காகக் கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளாய் 
மிச்ச வாழ்வும் முதுகொடிந்து போனது. குலையோடு சரிந்த வாழைகளாய் 
குலம் நொடிந்து போயிருக்கிறது.

கூடிழந்த பறவைகளாய் 
வீடிழந்து நிற்கிறது.
கருப்பம் கலைந்த நெல் பயிராய் உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும் 
கண்ணீர் தேங்கி நிற்கும் 
வதை நிலமாகிப் போச்சே மக்கா.

நிலத்தை விட்டு விடுவோமா? 
நிலம்தான் எம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி அறுத்தெறிஞ்ச நமக்கு, 
நிலத்தாளோட தொப்பூள்க் கொடியை அறுத்தெறிய மனசில்லயே மக்கா; அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக