வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : மக்களுக்கான கவிதைகள் :- தமிழ்ப் பரிதி


சொல் நிலத்தின் கவிதைகள் என்பன பல்வேறு பேசுபொருள்களை கொண்டிருப்பினும் அரசியல் கவிதைகள் மக்களின் வலியை, மண்ணின் மரபை பேசும் கவிதைகளே எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அத்தகைய கவிதைகளையே தாங்கள் சொல் நிலத்தில் கொடுத்திருக்கிறீர்கள். நூலில் 87 கவிதைகளின் தலைப்புகளே தமது பாடு பொருளை சொல்லிவிட்டன. அனைத்து கவிதைகள் பற்றியும் சொல்ல வேண்டியவை நிறைய இருப்பினும் என்னால் சிலவற்றை மட்டுமே மேற்கோள் காட்ட முடிந்தது.

போலி சனநாயகத்தை எள்ளிச் சிரிக்கும் குண்டர்கள் கவிதை மிக அருமை

கருப்பிகளின் வியர்வை என்ற சொல் மிக அழகாக அக்கவிதையில் வந்து விழுந்திருக்கிறது.

இவை மக்களுக்கான கவிதைகள்.
கவிஞர்களுக்கான கவிதைகள் அல்ல இவை. இவற்றை புகழ்ந்தோ திறனாய்ந்தோ எவரும் பேசினாலும் பேசாவிட்டாலும் இவை என்றும் நிலைத்து நிற்கும் கவிதைகளாய் வாழும்
வாழ்த்துகள் தோழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக