வெள்ளி, 6 அக்டோபர், 2023

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு நிலைத்திருப்பார்.

பெருந்துயர் இரங்கல்.

தமிழர் வரலாற்று வரைவியலை, உலகலாவிய ஆய்வுத்தேடல்களாலும் புதிய தரவுகளாலும் வலுப்படுத்தி உருவாக்கியதில் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. தமது வாழ்நாள் முழுதும் தமிழர் அடையாள மேன்மைக்கு அரும்பாடுபட்டவர்.

தமிழர் வரலாற்றைத் தேடிய பயணத்தையும் பெருந்தாகத்தையும் இவரளவுக்குக் கொண்டவர்கள் தற்போது யாருமே இல்லை. 

என் மீதும் என் எழுத்துகளின் மீதும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். அவ்வப்போது எம்மை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்.

அய்யாவின் ஆய்வுகள் அனைத்தும் நூல்களாக வெளிவரவேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தேன். அதற்கான முயற்சிகளிலும் அய்யா ஈடுபட்டிருந்தார். அண்மைக் காலத்திய உடல்நலக் குறைவு காரணமாக அதை உடனடியாகச் செய்திட முடியாமல் போயிற்று.

அய்யாவின் மறைவு தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு. வருங்காலத்தில் அய்யாவின் ஆய்வுகளை நூல்வடிவில் நிலைத்திருக்கச் செய்வதுதான் அய்யாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

அய்யாவின் மறைவு பெருந்துயரைத் தந்திருக்கிறது.

அய்யாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.அய்யாவுக்குப் புகழ் வணக்கம்.

இனி,

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு அவர்கள் நிலைத்திருப்பார்.

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

06.10.2023.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக