ஞாயிறு, 22 அக்டோபர், 2017

நிலப் படுகொலை.


குடிக்கத் தண்ணீரும்
வடிக்கச் சோறும்
ஈன்று புறம் தரும்
நிலத்தாளின் நெஞ்சாங்குழியில்
துளைகள் பல போட்டு
உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும்
கொத்துக் குழிகள்
நிலப் படுகொலையின்
படு களங்கள்.

நிலம் காக்க
இங்குமோர் இனம்
அழுது கொண்டிருக்கிறது
இப்போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக