ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தவிப்பு.


முன்னத்தி ஏராய்
சால் பிடித்த
அப்பாவின் உழவுகள்,
நிலத்தில் வரைந்த
கோட்டோவியங்கள்.

வியர்வை கோதிய
தளர் மண்ணில்
ஈரம் பருகிய விதைப்புகள்,
அம்மா வரைந்த
வெள் முளைக் கோலங்கள்.

உழைப்புச் சொற்களால்
நிலத்தை எழுதிப் போன
அப்பனும் ஆத்தாளும்
நெடும்பனைக்
காடு நினைத்தே
தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக