ஞாயிறு, 22 அக்டோபர், 2017

குறுக்குச் சால் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலும்.


அனிதாவைத் தமிழச்சியாக நெஞ்சில் பதித்துக் கொண்டு தான் மாணவர்கள் போராடுகிறார்கள். 
அனிதாவின் கனவைத் தமிழ்த் தேசிய இனத்தின் கனவாகத்தான் பார்க்கிறார்கள்.
உயர்த்திக் கொண்ட சாதிப் பிள்ளைகளும், ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிள்ளைகளும் தமிழ்ப் பிள்ளைகளாய்க் கைகள் கோர்த்திருக்கும் களமாய்த் தமிழ் நிலம் மாறிக் கொண்டிருக்கிறது.
கூடங்குளம், தமுக்கம், மெரினா, நெடுவாசல், கதிராமங்கலம் என்று பரந்து விரிகிறது தமிழ்த் தேசிய அரசியல் உணர்வு.
இப்படி, சாதியைக் கடந்து தமிழர் என்ற பேருணர்ச்சி உருவாகும் போது தான் தலித்திய அடையாள அரசியல் பேசுவோர் தமிழ்த் தேசிய வெறுப்பு அரசியலை உமிழ்ந்து குறுக்குச் சால் ஓட்டுவார்கள்.
அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களை உள்வாங்கி சுயவிமர்சனம் செய்து கொள்வது தமிழ்த் தேசியத்தின் முன் நிபந்தனை தான். இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தமிழ்த் தேசியம் நகர முடியாது தான். ஆனால், தமிழ்த் தேசியத்தின் மீதான வெறுப்பும் காழ்ப்பும் மட்டுமே விமர்சனங்களாக ஆகிவிடுமா?
சாதியம் தமிழ்த் தேசியத்தின் தீர்க்க வேண்டிய பிரச்சினை தான். இது ஒரு தரப்பினரால் மட்டும் தீர்க்கும் அல்லது தீர்ந்து போகும் பிரச்சினையும் அல்ல. இரு தரப்பினரும் தீர்க்கும் பிரச்சினைகள் தமிழ்த் தேசியத்தில் உண்டு. இந்நிலையில், இரு தரப்பும் அய்க்கியப்பட்டுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தும் போக்குகள் சாதியவாதிகளிடம் இருப்பதைப் போலவே, தலித்திய அடையாள அரசியல் பேசுவோரிடமும் இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பேர்தான் குறுக்குச் சால் அரசியல் என்பது.
இது போன்ற குறுக்குச்சால் வாதங்கள் இருக்கும் வரை தமிழ்த் தேசியம் எட்டாக்கனி தான்.
ஆயினும்,
உயர் சாதித் திமிரை ஒழித்துக்கட்டுவதும் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவதும் நடந்தே தீரும்.
இது நடக்கக் கூடாது என சாதியவாதிகள் நினைப்பதுபோலத்தான், தலித்தியம் பேசுவோரும் நினைக்கின்றனர்.
ஆயினும்,
தமிழ்த் தேசியத்தை இவர்களது கைகளால் மறைத்து விட முடியாது. அது, வெறும் கற்பனையானதும் கிடையாது.

4 கருத்துகள்:

  1. பெயரில்லா23/10/17, AM 2:01

    அருமையான பதிவு தோழர்.

    பதிலளிநீக்கு
  2. ஒடுக்கப்பட்டோர்களின் உடனான முரண் பாட்டை நேச முரண்பாடாக அணுகுவது தமிழ் தேசிய அரசியலின் வெற்றியை ஈட்டும்

    பதிலளிநீக்கு