ஞாயிறு, 22 அக்டோபர், 2017

காலடித் தடம்.


ஒத்தையடிப் பாதையில்
முன்னத்திலும் பின்னத்திலுமாய்
நிழல் கோதிப் பயணித்த
கால் தடங்களில்
புற்கள் முளைக்கத்
தயங்கிக் கிடக்கின்றன
மண் அப்பிய
பாதங்களை நினைத்து.

அகலப் பரப்பியிருக்கும்
நெடும் பாதைகளில்
தனித்தலையும் பயணிகள்
தேடும் பாதையைத்
தொலைத்துத் தவிக்கிறார்கள்.

காலம்
மனிதத் தடங்களை
அழித்துக் கொண்டே வந்தாலும்,
தொட்டில்களுக்குள் உதைத்துக் கொண்டு
கதைகள் பேசுகின்றன
இளம் பாதங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக