ஞாயிறு, 22 அக்டோபர், 2017

உப்பளக் காணி.


கூடுகள் கட்டிக் கொள்ள
ஈந்த கிளைகளின் நிழலைச்
சேதாரப்படுத்திப் போயின
வன் பருந்துகள்.
இறுகிய வன்றெக்கை முகத்திலிருந்து
தெறித்த பார்வைக் கங்குகள்
மனக் கூட்டின் ஆவியைச்
சுட்டுப் போட்டது.

இறக்கை முளைக்காத
இளங் குஞ்சுகள்
பிய்ந்த கூட்டுக்குள்
ஒடுங்கிக் கிடக்கின்றன.

கொத்தப்பட்ட காயத்தைச்
சொல்லிச் சொல்லி
மடி நனைக்க
தேக்கி வைத்த
அழுகை ஈரம்,
வெறுங் காற்றில்
உலர்ந்து போனது
உப்பளக் காணியில்
உழுது போட்ட தொளி போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக