ஞாயிறு, 22 அக்டோபர், 2017

உயிர்த்தறுப்புகள்


நிலமே கதியென்று
உழைத்துக் கிடந்தவர்களின்
கையளவுக் காணிகளை
அதிகாரக் களவாணிகள்
களவாடிய பின்பும்,
குத்தகை வாரத்துக்கும்
கொத்துக்கும் கூலிக்குமாய்
உழைத்து மாய்ந்திடத்
தஞ்சமடைந்த ஆவிகளின்
தொப்பூள்க் கொடிகள் யாவும்
அந்த நிலத்தையே தான்
சுற்றிக் கிடந்தன.

கருதறுப்பு
களம் மாறிப் போனாலும்,
கழுத்தறுப்பு இழவுகள்
பல சுமந்தாலும்,
நிலத்தறுப்பு பொறுக்காது
மாங்கு மாங்கென்று
உழைத்த மேழியரின்
உயிர்த்தறுத்துக் கொன்ற
அதிகாரப் பயங்கரவாதம்,
கீழ்வெண்மணித் தீயாக
எரிந்து கொண்டிருக்கிறது;
தாமிரபரணி ஆறாக
ஓடிக் கொண்டிருக்கிறது
இன்னும்.
*
ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக