செவ்வாய், 26 அக்டோபர், 2021

தமிழர்கள் கொண்டாட வேண்டிய நேர்மையான படைப்பு : செ. தமிழ்நேயன், மருந்தாளுநர்


ஆய்வுகள் வரலாற்றை நேர்செய்யும் என்ற நம்பிக்கை, சிலரின் நூல்களில் இருந்து தெளிவு பெறலாம். அந்தச் சிலரில் மகாராசன் அவர்களின் படைப்பு இருப்பதே மகிழ்ச்சி. இற்றைய நாட்களில் ஆய்வு என்ற பெயரில் சாதியப் பெருமைகளை மட்டுமே வழமையாகப் பதிவு செய்யும் சூழலில், நேர்மையான ஆய்வாக உள்ளது என்பதே சிறந்த முயற்சி. 

வேளாண் மரபின் தமிழ் அடையாளம் தமிழர் அனைவரும் கொண்டாட வேண்டிய படைப்பு. வேளாண் நாகரிகத்தில் நெல்லின் பங்கு என்ன?நெல் வகைகள், காளைகளைப் பற்றிய பட்டியல், உழவுச்சொற்கள், உழவர் சிறப்பு, மழையை ஏன் கொண்டாட வேண்டும்? சங்க கால எச்சம் இற்றை வரை நீள்கிறது என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். 

பள்ளர் என்பது காரணப்பெயர்?மரபுப்பெயர்? என்பதையும் விவரிக்கிறார். பள்ளர்களுக்கு ஏன் வேளாளர் அடையாளம்? வேளாண் குடிகளின் வாழ்வியலை இலக்கியச் சான்றுகள் துணைக் கொண்டு  நிறுவுகிறார். 

எழுத்தாளர் தம்முடைய உரையில் எழுத்துப்போலியை இடைஇடையே  பதிவு செய்துள்ளார் (ஐ-அய்). 

திராவிடச் சாயல் எதுவுமில்லை. திசை சார்ந்த சொல் வழக்காறுகள் உள்ளது. பள்ளு இலக்கியத்தை மீள் வாசிப்புக் செய்யத் தூண்டுகிறார். நெல் பயன்பாட்டைக் கொண்டு வரலாற்றின் காலத்தையும் நிறுவலாம் என்பதையும் பதிவு செய்கிறார். வேந்த வணக்கம் பற்றிய குறிப்புகள் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. 

உழவு, உழவர், எருது, வேந்தர் வணக்கம், நெல் பற்றிய குறிப்புகள் என, தமிழர்கள் கொண்டாட வேண்டிய படைப்பு. 


கட்டுரையாளர்:

செ. தமிழ்நேயன், மருந்தாளுநர், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக