ஞாயிறு, 26 டிசம்பர், 2021

அலை நிலத்து அழுகை : மகாராசன்


கீழ்வெண்மணி
துயர் சுமந்த நாளின் 
பிற்பொழுதைத் 
தின்று முடித்த 
காலைப் பொழுது 
காரித் துப்பியது
சோசுத்தை. 

மடி விரித்த
ஆழ் கடல் ஓரத்துக் குடிசைகள் துகளோடு துகளாய்ப் போயின. 

நிலவுக் கீற்று
கிழித்த கோடுகள் பிடித்து 
தொலை கடலுக்குள் போன கட்டுமரங்கள் 
தொலைந்தே போயின. 

உயிர் போன
வெறும் கட்டைகளாய் 
மிதந்து வந்தன
உடல்கள். 

அலை ஓசைந் தாலாட்டில் 
தூங்கிய பிஞ்சுகள் 
ஒப்பாரிகள் பாடின. 

வலையில் மீன்கள் அள்ளி 
வயிறுகள் கழுவிய
கவுச்சி வாழ்க்கை
மீன்களுக்கே
இரையாகிப் போயின. 

ஒதுங்கிக் கிடந்த இடுகாட்டையும்
அகலப் பரப்பிச் 
சேரிக்குள் இழுத்து வந்தன 
அலைகள். 

சுள்ளி அடுக்குகளாய் பெருங்குழிக்குள் 
மனிதங்களை அடுக்கி 
சாவை மூட்டிச் சென்றது 
கடல். 

உரிமை பறிக்கும்
சாதித் திமிராய் 
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.
*
ஏர் மகாராசன் 
#சொல்நிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக