செவ்வாய், 26 செப்டம்பர், 2023

திலீபன்: விடுதலைப்பசி உணர்த்திய பேரறம் - மகாராசன்


தமிழ் இனத்தின் 
விடுதலைப் பசிக்குத்
தன்னுயிரை
மெல்ல மெல்லத் 
தின்னக்கொடுத்தவன்.

ஈழக் கனவை
நிலத்தில் விதைத்து,
சொட்டு நீரும் அருந்தாமல்
உண்ணா நோன்பிருந்து
உயிர் நீத்தவன்.

அறத்தையும் மறத்தையும்
காண்பித்துப் போன
ஈகத்தின் பெருஞ்சுடர்
திலீபன்.

தமிழர் தாயகத்தின் 
விடுதலைப் பசி உணர்த்திய பேரறம் திலீபம்.

திலீபனின்
தாயகப் பசிதான்
இன்னும் அடங்கவில்லை.

ஏர் மகாராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக