சனி, 23 செப்டம்பர், 2023

ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்: எழுத்தாளர் சோ.தர்மன்


சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திருமிகு சோ.தர்மன் அவர்கள், அண்மையில் நான் எழுதிய மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலைக் குறித்துத் தமது முகநூலில் எழுதிய அறிமுகக் குறிப்பு. அய்யா அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்.

"தம்பி ஏர் மகாராசன் எழுதியுள்ள "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்கிற சிறு புத்தகம் நேற்று ஆதி பதிப்பகத்தால் பதிவுத் தபாலில் வந்து சேர்ந்தது.

இன்றைய மாணவர்கள், குறிப்பாகப் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இன்றைய நிலையை ஆழமாகவும் விரிவாகவும் போலித்தனம் இல்லாமலும் ஆராய்கிறது.

நாங்குனேரி மாணவர்கள் வெட்டப்பட்டதின் பின்னணியை வெகு நுட்பமாக நம் முன் பேசுகிறது. முற்போக்காளர்களின் சப்பைக் கட்டுக் காரணங்களை நிராகரித்து உண்மையைப் பேசுகிறது.

ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். அரசின் கவனம் பெற வேண்டிய புத்தகம். எழுபது பக்கங்கள் மட்டுமே உள்ள மிகச் சிறிய புத்தகம்."

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க.
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை
விலை:90 ரூபாய்.
தொலை பேசி:9159933990.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக