புதன், 29 மார்ச், 2017

போராட்ட வாசல்.


வாடிவாசல்
மறித்துக் கிடந்த அதிகாரத்தை
வீடு வாசல் போகாமல்
உடைத்தெறிந்தோம்.

நெடுவாசல்
நுழைந்திருக்கும் அதிகாரத்தை
இடுகாட்டில் புதைத்தெறிவோம்.

செந்நீர் வழியவும்
தீநீர் ஒழுகவும்
அறத்தையும்
மறத்தையும் சுமந்து
நிலத்தையும் இனத்தையும் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக