புதன், 29 மார்ச், 2017

கூட்டிசைப் பூக்கள்.


காற்றசைப்புகளில்
உதிர்ந்து விழுகிற
பன்னீர்ப் பூக்கள்
முகம் சிரித்துச்
செந்தரையில்
கிடப்பதைப் போல,
கூட்டமாய்ச் சலசலத்து
குரல் சிந்திய கூட்டிசை
காற்றில் கரைந்து
செவியில் நுழைந்து
செல்லத் துள்ளலாய்க்
கண்ணில் மணக்கின்றன
பூனைக் குருவிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக