புதன், 29 மார்ச், 2017

உலர்நிலச் சிறுக்கி.


வெம்பாலைச் சுரந்து
தாய்மையை வடித்து
உயிர்ப்பைக் கொப்பளிக்கும்
உலர் நிலத்துச் சிறுக்கியின்
பசுந்தோல் மேனியில்,
காக்கா முள்ளின்
கூர் நுனியால்
நம் பெயர் எழுத எழுத,
பால் ஈரம் சுரந்த
அம்மாவின் மனசு போலவே
பச்சை உடுத்திச்
சிரித்து நிற்கிறாள்
கள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக